Published : 05 Nov 2025 07:12 AM
Last Updated : 05 Nov 2025 07:12 AM

தமிழகத்தில் எஸ்ஐஆர் பணிகள் தொடக்க நிலையிலேயே தோல்வி: மு.வீரபாண்டியன் விமர்சனம்

சென்னை: ​வாக்​காளர் பட்​டியல் சிறப்பு தீவிர திருத்​தம் (எஸ்​ஐஆர்) தொடக்க நிலை​யிலேயே தோல்​வியடைந்​திருப்​ப​தாக இந்​திய கம்​யூனிஸ்ட் மாநில செய​லா​ளர் மு.வீர​பாண்​டியன் விமர்​சித்​துள்​ளார்.

இதுதொடர்​பாக அவர் வெளி​யிட்ட அறிக்​கை: தேர்​தல் ஆணை​யம் சர்​வா​தி​காரப் போக்​குடன் வாக்​காளர் பட்​டியல் சிறப்பு தீவிர திருத்​தம் தொடர்​பான பணி​களை தமிழகத்​தில் இன்று (நேற்​று) தொடங்​கி​யுள்​ளது. இதையொட்டி காலை 10 மணிக்கு வாக்​குச்​சாவடி நிலை அலு​வலர்​கள் வீடு, வீடாக படிவங்​களை வழங்க சென்​ற​போது வீடு​கள் பூட்​டி​யிருப்​ப​தை​யும், உரிய வாக்​காளர்​கள் வீடு​களில் இல்​லை. இதனால் படிவங்​களை வழங்​காமல் அலு​வலர்​கள் திரும்​பும் நிலை ஏற்​பட்​டுள்​ளது.

மேலும் 2002, 2005-ம் ஆண்டு வாக்​காளர் பட்​டியல்​களில் பெயர் உள்​ளவர்​கள் பெரும்​பாலானோர் வாடகை வீடு​களில் குடி​யிருந்​தவர்​கள். இவர்​களில் பலரும் தற்​போது குடிபெயர்ந்​துள்​ளனர் என்​பதும் களஆய்​வில் வெளிப்​பட்டு வரு​கிறது. அதே​போல் 2005 முதல் 2024 வரை பலமுறை சுருக்​கம் முறை திருத்​தத்​தின் அடிப்​படை​யில் வாக்​காளர் பட்​டியல்​களில் பெயர்​கள் சேர்க்​கப்​பட் டுள்​ளன.

தற்​போது அவர்​களின் பெயர்​கள் எந்த வாக்​குச்​சாவடி​யின் பட்​டியலில் உள்ளன என சரி​பார்க்க முடி​யாமல் அலு​வலர்​கள் திணறுகின்​றனர். எனவே தொடக்க நிலை​யிலேயே தோல்​வியடை​யும் எஸ்​ஐஆர் பணியை நிறுத்​தி​விட்​டு, 2024 வாக்​காளர் பட்​டியல்படி சுருக்​க​முறை திருத்​தம் மூலம் தேர்​தலை நடத்த முன்​வர​வேண்​டும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x