Published : 05 Nov 2025 07:00 AM
Last Updated : 05 Nov 2025 07:00 AM

7 மாவட்டங்களில் இன்று கனமழை

சென்னை: தமிழகத்தில் 7 மாவட்​டங்​களில் ஓரிரு இடங்​களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்​புள்​ள​தாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்​ளது.

இது தொடர்​பாக மைய இயக்​குநர் செந்​தாமரைக் கண்​ணன் வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பு: மத்​திய கிழக்கு வங்​கக் கடல் மற்றும் அதை யொட்​டிய மியான்மார் கடலோரப் பகு​தி​களில் நில​விய காற்​றழுத்​தத் தாழ்​வுப் பகு​தி, ஆழ்ந்த காற்​றழுத்த தாழ்​வுப்பகு​தி​யாக வலுப்​பெற்​றது. இது, வடகிழக்கு மற்​றும் அதையொட்​டிய மத்​திய கிழக்கு வங்​கக் கடல் - மியான்​மார் கடலோரப் பகு​தி​களில் நில​வு​கிறது.

மத்​தியமேற்கு வங்​கக்​கடல்பகு​தி​களில் ஒரு வளிமண்டலகீழடுக்கு சுழற்சி நில​வு​கிறது.இதன் காரண​மாக இன்று வட தமிழகத்​தில் சில இடங்​கள், தென் தமிழகத்​தில் ஓரிரு இடங்​கள் மற்​றும் புதுச்​சேரி, காரைக்​கால் பகு​தி​களில் இடி, மின்​னலுடன் கூடிய, லேசானது முதல் மித​மான மழை பெய்​யக்​கூடும். தஞ்​சாவூர், திரு​வாரூர், நாகப்​பட்​டினம், மயி​லாடு​துறை, புதுக்​கோட்​டை, அரியலூர் மற்​றும் திருச்சி ஆகிய 7 மாவட்​டங்​களில் ஓரிரு இடங்​களில் கனமழை பெய்​ய​வாய்ப்​புள்​ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x