Published : 04 Nov 2025 06:20 AM
Last Updated : 04 Nov 2025 06:20 AM

பூண்டி ஏரி​யில் படகில் சென்று செல்ஃபி எடுக்க முயன்​ற​போது தவறி விழுந்து நீரில் மூழ்​கிய சென்னை இளைஞர்

ஊத்​துக்​கோட்டை: பூண்டி ஏரி​யில் படகில் சென்று செல்ஃபி எடுக்க முயன்​ற​போது தவறி விழுந்து நீரில் மூழ்​கிய சென்னை இளைஞ​ரால் பரபரப்பு ஏற்​பட்​டுள்​ளது. சென்​னை​யின் குடிநீர்த் தேவையை பூர்த்தி செய்​யும் முக்​கிய ஏரி​களில் ஒன்று பூண்டி ஏரி. வடகிழக்கு பரு​வ​மழை​யால் முழு கொள்​ளளவை எட்​டும் நிலை​யில் இருந்​த​தால், பூண்டி ஏரியி​லிருந்​து, கொசஸ்​தலை ஆற்​றில் உபரிநீர் வெளி​யேற்​றப்​பட்டு வரு​கிறது.

இதனால், கடல் போல் காட்​சி​யளிக்​கும் பூண்டி ஏரியை​யும், அதில் இருந்து ஓசை​யுடன் வெளி​யேறும் உபரிநீரை​யும் பொது​மக்​கள் குழந்​தைகளு​டன் பார்த்து மகிழ்ந்து வரு​கின்​றனர். அந்த வகை​யில், சென்​னை, வண்​ணாரப்​பேட்​டையை சேர்ந்த யாசின் (22), தன் நண்​பர்​கள் 3 பேருடன் நேற்று முன் தினம் மாலை பூண்டி ஏரிக்கு வந்​தார்.

அப்​போது, யாசின் தன் நண்​பர்​களு​டன் சிறிய மீன் பிடி படகில் சென்​று, ஏரியை ரசித்து மகிழ்ந்​தார். யாசின் செல்ஃபி எடுக்க முயன்​ற​போது, எதிர்​பா​ராத​வித​மாக படகில் இருந்து தவறி விழுந்து நீரில் மூழ்​கி​னார். இதனையறிந்த யாசின் நண்​பர்​கள், அவரை மீட்க முயன்​றும் பலனில்​லை.

இதுகுறித்​து, தகவல் அறிந்த திரு​வள்​ளூர் தீயணைப்பு நிலைய வீரர்​கள், நேற்று முன் தினம் சுமார் 3 மணி நேரம் தேடி​யும், யாசினை மீட்க முடிய​வில்​லை. அதே நேரத்​தில் இருள் சூழ்ந்​தால், தேடும் பணி நிறுத்​தப்​பட்​டது.

இதையடுத்​து, நேற்று காலை மீண்​டும் யாசினை தேடும் பணி​யில் தீயணைப்பு வீரர்​கள் ஈடு​பட்​டனர். அப்​பணி நேற்று மாலை வரை தொடர்ந்​தும் யாசின் கிடைக்​க​வில்​லை. ஆகவே, யாசினை தேடும் பணி இன்​றும் தொடரும் என, தீயணைப்பு வீரர்​கள் தரப்​பில் தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது. இச்​சம்​பவம் தொடர்​பாக பென்​னலூர்பேட்டை போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x