Published : 04 Nov 2025 06:41 AM
Last Updated : 04 Nov 2025 06:41 AM

பனையூர் அலுவல​கத்துக்கு சென்ற சிபிஐ அதிகாரிகள்: பிரச்சார வாகன கேமரா பதிவுகளை கேட்டு சம்மன்

கரூர்: கரூர் துயரச் சம்​பவம் தொடர்​பாக தவெக அலு​வல​கம் அமைந்​துள்ள பனையூருக்கு சிபிஐ அதி​காரி​கள் 3 பேர் நேற்று சென்றனர். அப்​போது பிரச்​சார வாகன கேமரா பதிவு​களைக் கேட்டு சம்​மன் கொடுத்​துள்​ள​தாக தகவல் வெளி​யாகி​யுள்​ளது. கரூர் வேலு​சாமிபுரத்​தில் கடந்த செப்​.27-ம் தேதி நடந்த தவெக பிரச்​சா​ரக் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயி​ரிழந்​தனர். இவ்​வழக்கை சிபிஐ விசா​ரித்து வரு​கிறது.

சம்​பவம் நடை​பெற்ற இடத்​தில் கடை வைத்​துள்ள வியா​பாரி​கள், நேரடி சாட்​சிகள், பல்​வேறு துறை அதி​காரி​கள் என இது​வரை மொத்​தம் 306 பேருக்கு சம்​மன் அனுப்​பி, விசா​ரணை மேற்​கொண்டு வரு​கின்​றனர். அதன்​படி, நேற்று முன்​தினம் வேலு​சாமிபுரத்​தைச் சேர்ந்த 10-க்​கும் மேற்​பட்ட வியா​பாரி​களிடம் சிபிஐ அதி​காரி​கள் விசா​ரணை நடத்​தினர்.

தொடர்ந்​து, கரூர் சுற்​றுலா மாளி​கை​யில் நேற்று 2-வது நாளாக வேலு​சாமிபுரத்​தில் பேக்​கரி வைத்​திருப்​பவர், கேட்​டரிங் கல்​லூரி வைத்​திருப்​பவர் உள்​ளிட்ட சம்​மன் அனுப்​பப்​பட்ட 10-க்​கும் மேற்​பட்​ட​வர்​களிடம் சிபிஐ அதி​காரி​கள் விசா​ரணை மேற்​கொண்டனர்.

இதற்​கிடையே, கரூர் குற்​ற​வியல் நடு​வர் நீதி​மன்​றம்-1 மாஜிஸ்​திரேட் பரத்​கு​மாரை சிபிஐ அதி​காரி​கள் சந்​தித்​தனர். 3 பேர் அடங்கிய குழு கரூர் சுற்​றுலா மாளி​கை​யில் தங்​கி​யுள்ள சிபிஐ அதி​காரி​கள், ஆதவ் அர்​ஜு​னா​வின் ‘வாய்ஸ் ஆஃப் காமன்’ அமைப்​பில் பணி​யாற்றி வரும், கரூர் காம​ராஜபுரம் என்ற முகவரியைச் சேர்ந்த ராம்​கு​மார் என்​பவரிடம் விசா​ரணை நடத்த நேற்று முன்​தினம் சென்​றனர்.

அப்​போது, அவர் சென்​னை​யில் இருப்​ப​தாகக் கிடைத்த தகவலின்​பேரில் சிபிஐ இன்​ஸ்​பெக்​டர் பெனிக் தலை​மை​யில் 3 பேர் கொண்ட குழு​வினர் நேற்று முன்​தினம் சென்னை புறப்​பட்​டுச் சென்​றனர்.

சென்னை பனையூரில் உள்ள தவெக​வின் அலு​வல​கத்​துக்கு நேற்று சென்ற சிபிஐ அதி​காரி​கள், விஜய்​யின் பிரச்​சார வாக​னத்​தில் உள்ள கேமரா பதிவு​கள் மற்​றும் நிகழ்ச்​சி​யில் பங்​கேற்​றவர்​களின் விவரங்​களை அளிக்​கு​மாறு இணை பொதுச்​செய​லா​ளர் நிர்​மல்​கு​மாரிடம் கேட்டு சம்​மன் கொடுத்​த​தாக​வும், அவற்றை 3 நாட்​களில் அளிப்​ப​தாக அவர் கூறிய​தாக​வும் தகவல் வெளி​யாகி உள்​ளது.

மேலும், ராம்​கு​மார் எங்கு உள்​ளார் என்ற விவரத்​தை​யும் அவரிடம் கேட்​ட​தாகத் தெரி​கிறது. நிர்​மல்​கு​மார் அளித்த தகவலின் அடிப்​படை​யில் ராம்​கு​மாரிடம் விசா​ரணை நடத்த சிபிஐ அதி​காரி​கள் திட்​டமிட்​டுள்​ளனர்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x