Last Updated : 03 Nov, 2025 07:11 AM

2  

Published : 03 Nov 2025 07:11 AM
Last Updated : 03 Nov 2025 07:11 AM

மாணவர்களின் அடிப்படை ஆரம்பக் கல்விக்காக 82 வயதிலும் சேவையாற்றும் முன்னாள் ரயில்வே ஊழியர்

சென்னை: சென்​னை​யில் வசிக்​கும் 82 வயதான ஒரு​வர் ரயில்வே பணி​யில் இருந்து விருப்ப ஓய்வு பெற்​று, தொடர்ந்து 25 ஆண்டுகளாக அடிப்​படை ஆரம்​பக் கல்விக்​காக, சேவை​யாற்றி அனை​வரை​யும் ஆச்​சரி​யப்​படுத்தி வரு​கிறார். சென்னை விரு​கம்​பாக்​கம் குமரன் நகர் 2-வது பிர​தான சாலை​யில் வசிப்​பவர் என்​. சுப்​பிரமணி​யன்​(82). இவரது சொந்த ஊர் ராணிப்​பேட்டை மாவட்டம் வணக்​கம்​பாடி.

10-ம் வகுப்பு வரை படித்​திருந்த இவர் ரயில்வே சர்​வீஸ் ஆணை​யத் தேர்​வில் வென்​று, 1964-ல் ரயில்வே சிக்​னல் மற்​றும் தொலைத் தொடர்பு துறை​யில் கிளார்க்​-ஆக பணி​யில் சேர்ந்​தார். அங்கு ஆங்​கிலத்​தின் அவசி​யம் மற்​றும் உயர்​கல்​வி​யின் தேவையை உணர்ந்த அவர், குறுகிய காலத்​தில் ஆங்​கில அறிவை மேம்​படுத்​திக் கொண்​டு, சிறப்​பாகப் பணி​யாற்றி வந்​தார்.

எனினும், அடிப்​படைக் கல்​வி​யின் முக்​கி​யத்​து​வம் குறித்த எண்​ணம் அவரது மனதில் ஆழமாகப் பதிந்​தது. மாணவர்​களுக்கு அடிப்​படைக் கல்​வியை நன்று போதிக்க வேண்​டுமென்ற விருப்​பம் மேலோங்​கியது. இதையடுத்​து, முதல்​நிலை அலு​வலக கண்​காணிப்​பாள​ராக பதவி வகித்த​போது, தனது 57-வது வயதில் விருப்ப ஓய்வு பெற்​றார்.

அதன்​பின்​னர், ராணிப்​பேட்டை மாவட்​டம் வணக்​கம்​பாடி, திரு​வண்​ணா​மலை மாவட்​டம் போளூர், குரு​விமலை மற்​றும் கீழ்​பெண்​ணாத்​தூர், பெலாசூர், ராம​பாளை​யம் ஆகிய ஊர்​களில் உள்ள தொடக்​கப் பள்​ளி​களில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்​களுக்கு கல்வி கற்​பிக்​கும் சேவையைத் தொடங்​கி​னார்.

மாணவர்​கள் நீதிநெறி நூல், திருக்​குறள், ஆங்​கில அகரா​தி, உலக வரைப்பட புத்​தகம், அறநெறிப் பாடல் அடங்​கிய புத்​தகம், பென்​சில்​-ரப்​பர் போன்​றவற்றை வழங்​கியதுடன், பள்​ளி​களுக்கு பல்​வேறு கல்வி உபகரணங்​களை​யும் வாங்​கிக் கொடுத்​தார். தினமும் 180 கி.மீ. முதல் 200 கி.மீ.வரை பயணித்து தொடக்​கப் பள்​ளி​களுக்கு சென்று வந் தார். இதுத​விர, சென்னை கோயம்​பேடு, விரு​கம்​பாக்​கம், அரும்​பாக்​கத்​தில் உள்ள 4 தொடக்கப் பள்​ளி​களுக்கு சென்று கல்​விச் சேவை​யாற்​றி​னார்.

சென்​னை​யில் உள்ள பள்​ளி​களுக்கு 2013-14-ம் ஆண்டு வரை கல்​விச் சேவை புரிந்த அவர், தற்​போது திரு​வண்​ணா​மலை, ராணிப்​பேட்​டை, வேலூரில் உள்ள கிராமப்​புற அரசு தொடக்​கப் பள்​ளி​களில் தீவிர கல்​விச் சேவை​யில் ஈடு​படு​கிறார். தற்​போது இவரது கல்​விச் சேவை 25-வது ஆண்டை எட்​டி​யுள்​ளது.

இது​வரை 25-க்​கும் மேற்​பட்ட பள்​ளி​களில் பயிலும் ஆயிரக்​கணக்​கான மாணவர்​களை சந்​தித்​துள்​ளார். ஓர் மாணவருக்கு ரூ.350 முதல் ரூ.500 வரை செல​விடு​கிறார். ஒரு ஆண்​டுக்கு ரூ.75 ஆயிரம் வரை செல​விடு​கிறார். தனது ஓய்​வூ​தி​யத்​தைக் கொண்டு கல்​விச் சேவை​யாற்​றும் இவரை மறைந்த முன்​னாள் ஆளுநர் ரோசய்​யா, தமிழக முன்​னாள் அமைச்​சர்​கள், ரயில்வே உயர​தி​காரி​கள் உள்​ளிட்​டோர் பாராட்​டி​யுள்​ளனர்.

100-க்​கும் மேற்​பட்ட விருதுகளை​யும், பாராட்​டுச் சான்​றிதழ்​களை​யும் குவித்​துள்ள சுப்​பிரமணி​யன், `இந்து தமிழ் திசை' செய்​தி​யாளரிடம் கூறிய​தாவது: குரு​விமலை, வ​ணக்​கம்​பாடி​யில் உள்ள பள்​ளி​களில் தொடர்ந்து 25 ஆண்​டு​களாக​வும், ராம​பாளை​யம், பெலாசூரில் உள்ள பள்​ளி​களில் 20 ஆண்​டு​களாக​வும் சேவைபுரிந்து வரு​கிறேன்.

கிராமப்​புறங்​களில் உள்ள பள்​ளி​களில் தொடக்​கப் பள்ளி மாணவர்​களுக்கு புத்​தகம், கல்வி உபகரணங்​களை தொடர்ந்து வழங்​கு​கிறோம். மேலும், ஆத்​திசூடி நூல், பழங்​கள், மலர்​கள் உள்​ளிட்ட தகவல்கள் அடங்​கிய புத்​தகத்​தை​யும் வழங்​கு​கிறோம். எனது கல்​விச் சேவைக்கு மனைவி மற்​றும் 3 பிள் ளை​கள் துணை​யாகஇருக் கிறார்​கள். மாணவர்களுக்கு ஆரம்​பக் கல்வி மிக​வும் அவசி​யம். இறக்​கும் வரை கல் விச்​சேவை​யில்​ ஈடு​பட விரும்​பு​கிறேன்​. இவ்​வாறு அவர்​ கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x