Published : 03 Nov 2025 06:19 AM
Last Updated : 03 Nov 2025 06:19 AM

மெட்ரோ ரயில் உயர்மட்ட கட்டுமானத்தில் போரூர் - பவர் ஹவுஸ் வரை 8 கி.மீ.க்கு பாதை அமைக்கும் பணி நிறைவு

சென்னை: இரண்​டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்​டத்​தின் 4-வது வழித்​தடத்​தில், போரூர் - பவர் ஹவுஸ் வரை உயர்​மட்ட கட்டுமானத்தில் 8 கி.மீ. தொலை​வுக்கு உயர்​மட்​டப் பாதை அமைக்​கும் பணி நிறைவடைந்​துள்​ள​தாக சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதி​காரி​கள் தெரி​வித்​தனர்.

சென்​னை​யில் இரண்​டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்​டம் 116.1 கி.மீ. தொலை​வில் 3 வழித்​தடங்​களில் செயல்​படுத்​தப்​படு​கிறது. இவற்​றில் கலங்​கரை விளக்​கம் - பூந்​தமல்லி பைபாஸ் வரையி​லான 4-வது வழித்​தடம் (26.1 கி.மீ.) ஒன்​றாகும். இத்​தடத்​தில் போரூர் - பூந்​தமல்லி வரை உயர்​மட்​டப்பாதைபணி​கள் நிறைவடைந்​து, தற்​போது, மெட்ரோ ரயில் சோதனை ஓட்​டம் நடைபெறுகிறது.

இதையடுத்​து, போரூர் - பவர்ஹவுஸ் வரையி​லான உயர்​மட்​டப் பாதை அமைக்​கும் பணி தீவிர​மாக நடை​பெறுகிறது. இப்​பாதை​யில் சில இடங்​களில் மாதவரம் - சோழிங்​கநல்​லூர் வரையி​லான 5-வது வழித்​தடம் மற்​றும் பூந்​தமல்லி - கலங்​கரை விளக்​கம் வரையி​லான 4-வது வழித்​தடம் ஆகிய இரு வழித்​தடங்​கள் சில இடங்​களில் இணை​கின்​றன.

குறிப்​பாக ஆழ்​வார் திருநகர், வளசர​வாக்​கம், காரம்​பாக்​கம், ஆலப்​பாக்​கம் மெட்ரோ ரயில் நிலைய பகு​தி​களில் டபுள்​டெக்​கர் லைன் எனப்​படும் 2 அடுக்கு உயர்​மட்​டப் பாதைகள் அமைக்​கப்​படு​கின்​றன. போரூர் - பவர் ஹவுஸ் வரை உயர்​மட்​டப் பாதை கட்​டு​மானத்​தில் 8 கி.மீ. தொலை​வுக்கு மேம்​பாலப் பாதை அமைக்​கும் பணி நிறைவடைந்​துள்​ளன.

இதுகுறித்​து, சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதி​காரி​கள் கூறிய​தாவது: இரண்​டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்​டத்​தில், ரயில் பாதைக்​கான கர்​டர்​கள் அமைக்​கும் பணி​கள் நிறைவடைந்​துள்​ளன. போரூர் - பவர் ஹவுஸ் வரை உயர்​மட்ட மெட்ரோ ரயில் பாதை கட்​டு​மானத்​தில், 9 மெட்ரோ ரயில் நிலை​யங்​கள் மற்​றும் 8 கி.மீ. தொலை​வுக்​கான உயர்​மட்​டப் பாதை அமைக்​கும் பணி​கள் நிறைவடைந்​துள்​ளன. அடுத்த கட்​ட​மாக, இதன் மீது ரயில்​பாதை அமைக்​கும் பணி​கள் மேற்​கொள்​ளப்​படும். இவ்​வாறு அவர்​கள் கூறினர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x