Published : 03 Nov 2025 06:29 AM
Last Updated : 03 Nov 2025 06:29 AM

மாமல்லபுரத்தில் ரூ.90.50 கோடி செலவில் புதிய பேருந்து நிலைய பணிகள் தீவிரம்

மாமல்லபுரத்தில் சென்னை-புதுச்சேரி செல்லும் ஈசிஆர் சாலையோரம் புதிதாக அமைக்கப்பட்டு வரும் பேருந்து நிலையத்தின் மாதிரி தோற்றம்.

மாமல்லபுரம்: ​மாமல்​லபுரத்​தில் ரூ.90.50 கோடி செல​வில் புதி​தாக அமைக்​கப்​பட்டு வரும் பேருந்து நிலை​யத்​தின் கட்​டு​மான பணிகள், விரை​வாக மேற்​கொள்​ளப்​பட்டு வரு​வ​தால், விரை​வில் திறக்​கப்​படும் என தகவல் வெளி​யாகி உள்​ளது. ஈசிஆர் சாலை​யில் செல்​லும் அனைத்து பேருந்​துகளை இங்கு நிறுத்தி இயக்க வேண்​டும் என உள்​ளூர் பொது​மக்​கள் மற்​றும் சுற்​றுலா பயணி​கள் கோரிக்கை விடுத்​துள்​ளனர்.

செங்​கல்​பட்டு மாவட்​டம், மாமல்​லபுரத்​தில் வீட்​டு​வசதி மற்​றும் நகர்ப்​புற வளர்ச்​சித் துறை, சென்னை பெருநகர் வளர்ச்சி குழு​மத்​தின் சார்​பில், 6.98 ஏக்​கர் பரப்​பள​வில் ரூ. 90.50 கோடி மதிப்​பில் புதிய பேருந்து நிலை​யம் அமைக்​கும் பணி​கள் கடந்த 2024-ம் ஆண்டு தொடங்கி நடை​பெற்று வரு​கிறது. புதி​தாக அமைக்​கப்​படும் இப்​பேருந்து நிலை​யத்​தின் கீழ்​தளத்​தில் 345 இருசக்கர வாக​னங்​கள் மற்​றும் 150 நான்கு சக்கர வாக​னங்​கள் நிறுத்​து​வதற்​கான வசதி​கள், குடிநீர் மற்​றும் கழிவு நீர் சுத்​தி​கரிப்பு நிலை​யம், 18 கேஎல்டி அளவு கொண்ட கீழ்​நிலை தொட்டி ஆகியவை அமைக்​கும் பணி​கள் நடந்து வரு​கிறது.

மேலும், தரைதளத்​தில் 48 பேருந்​துகள் நிறுத்​தும் வசதி​கள், பயண சீட்டு வழங்​கும் அலு​வல​கம், ஏடிஎம், பயணி​கள் காத்​திருப்பு அறை, பெண்​களுக்​கான ஓய்​வறை மற்​றும் கடைகள் அமைக்​கப்​பட்டு வரு​கிறது. இவை தவிர, சமையல் அறை​யுடன் கூடிய உணவகம், கண்​காணிப்பு அறை, பணியாளர் ஓய்​வறை, ஓட்​டுநர்​கள் தங்​கும் அறை​கள் போன்ற பல்​வேறு அடிப்​படை வசதி​கள் ஏற்​படுத்​தப்​பட்டு வரு​கிறது.

கட்​டு​மான பணி​களை விரை​வாக மேற்​கொள்ள வேண்​டும் என அறி​வுறுத்​தப்​பட்​டுள்​ள​தால், கூடு​தல் பணி​யாளர்​களு​டன் பணி​கள் வேகமெடுத்​துள்​ளன. இதனால், பல்​வேறு வசதி​களு​டன் புதிய தோற்​றத்​தில் கட்டப்படும் இப்​பேருந்து நிலை​யம் விரை​வில் பயன்​பாட்​டுக்கு கொண்டு வரப்பட உள்​ளது.

பயணிகள் கோரிக்கை: இதற்​கிடையே, புதிய பேருந்து நிலை​யத்​தில் ஈசிஆர் சாலை​யில் செல்​லும் அனைத்து பேருந்​துகளும் நின்று செல்​ல​வும், தொலை​தூர பகு​தி​களுக்கு இங்​கிருந்து நேரடி பேருந்து சேவை​களை ஏற்​படுத்த வேண்
​டும் என உள்​ளூர் பொது​மக்​கள் மற்​றும் சுற்​றுலா பயணி​கள் கோரிக்​கை விடு​த்​துள்​ளனர்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x