Published : 03 Nov 2025 06:03 AM 
 Last Updated : 03 Nov 2025 06:03 AM
சென்னை: சபரிமலை ஐயப்பன் கோயில் மண்டல பூஜை, மகரவிளக்கு பூஜையை முன்னிட்டு, தமிழகத்தில் இருந்து ஏராளமான பக்தர்கள் செல்வார்கள். சென்னையில்இருந்து சபரிமலை செல்லும் பக்தர்களின் வசதிக்காக, சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன.
அதன்படி, சென்னை எழும்பூரில் இருந்து நவ.14 முதல் 2026 ஜன.16-ம் தேதி வரை ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் இரவு 11.55 மணிக்கு வாராந்திர சிறப்பு ரயில் (06111) புறப்பட்டு, மறுநாள் மாலை 4.30 மணிக்கு கொல்லம் சென்றடையும். மறுமார்க்கமாக, கொல்லத்தில் இருந்து நவ.15 முதல் ஜன.17-ம் தேதி வரை ஒவ்வொரு சனிக்கிழமையும் இரவு 7.35 மணிக்கு புறப்படும் வாராந்திர சிறப்பு ரயில் (06112), மறுநாள் நண்பகல் 12 மணிக்கு எழும்பூர் வந்தடையும்.
சென்னை சென்ட்ரலில் இருந்து நவ.16 முதல் ஜன.18-ம் தேதி வரை ஒவ்வொரு ஞாயிறும் இரவு 11.50 மணிக்கு புறப்படும் வாராந்திர சிறப்பு ரயில் (06113), மறுநாள் மாலை 4.30 மணிக்கு கொல்லம் சென்றடையும். மறுமார்க்கமாக, கொல்லத்தில் இருந்து நவ.17 முதல் ஜன.19-ம் தேதி வரை ஒவ்வொரு திங்கள்கிழமையும் மாலை 6.30 மணிக்கு புறப்படும் வாராந்திர சிறப்பு ரயில் (06114), மறுநாள் பகல் 11.30 மணிக்கு சென்னை சென்ட்ரல் வந்தடையும்.
சென்னை சென்ட்ரலில் இருந்து நவ.19 முதல் ஜன.21-ம் தேதி வரை ஒவ்வொரு புதன்கிழமையும் பிற்பகல் 3.10 மணிக்கு புறப்படும் வாராந்திர சிறப்பு ரயில் (06119), மறுநாள் காலை 6.40 மணிக்கு கொல்லம் சென்றடையும். மறுமார்க்கமாக, கொல்லத்தில் இருந்து நவ.20 முதல் ஜன.22-ம் தேதி வரை ஒவ்வொரு வியாழக்கிழமையும் காலை 10.40 மணிக்கு புறப்படும் வாராந்திர சிறப்பு ரயில் (06120), மறுநாள் அதிகாலை 3.30 மணிக்கு சென்னை சென்ட்ரல் வந்தடையும்.
இதுதவிர, சென்னை சென்ட்ரல் - கொல்லம் இடையே 2 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன. மேற்கண்ட சிறப்பு ரயில்களுக்கான டிக்கெட் முன்பதிவு நாளை (நவ.4) காலை 8 மணிக்கு தொடங்குகிறது என்று தெற்கு ரயில்வே கூறியுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
								
WRITE A COMMENT