Published : 03 Nov 2025 07:02 AM
Last Updated : 03 Nov 2025 07:02 AM

ககன்யான் திட்டத்தில் ஆளில்லா விண்கலன் மார்ச் மாதத்துக்குள் ஏவப்படும்: இஸ்ரோ தலைவர் நாராயணன் தகவல்

சென்னை: ககன்​யான் திட்​டத்​தின் ஆளில்லா விண்​கலன் மார்ச் மாதத்​துக்​குள் விண்​ணில் செலுத்​தப்​படும் என்று இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத் (இஸ்ரோ) தலை​வர் வி.​நா​ராயணன் கூறி​னார்.

அவர் ஹரிகோட்டாவில் செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது: இஸ்ரோ வரலாற்​றில் முதல்​முறை​யாக, செயற்​கைக்​கோள் நிலைநிறுத்​தப்​பட்ட பிறகும், கிரையோஜெனிக் இயந்​திரம் மீண்​டும் 100 விநாடிகள் இயக்​கப்​பட்டு வெற்​றிகர​மாக பரிசோ​திக்​கப்​பட்​டது பெரிய சாதனை​யாகும். இதன்​மூலம் பல்​வேறு செயற்​கைக் கோள்​களை, ஒரே ராக்​கெட்​டில் சுமந்து சென்று புவிவட்​டப் பாதைகளில் நிலைநிறுத்த முடி​யும்.

அடுத்​தகட்​ட​மாக 5 மாதங்​களில் 7 ராக்​கெட் ஏவுதல் திட்​டங்​களை செயல்​படுத்த உள்​ளோம். எல்​விஎம் 3-எம் 6 ராக்​கெட் திட்​டம் மூலம் தனி​யார் தகவல் தொடர்பு செயற்​கைக் கோள் டிச. 2-ம் வாரத்​தில் செயல்​படுத்​தப்பட உள்​ளது. குலசேகரப்​பட்​டினத்​தில் ராக்​கெட் ஏவுதளம் அமைந்த பின்​னர் 3 வாரங்​களுக்கு ஒரு ராக்​கெட் ஏவப்​படும்.

விண்​வெளிக்கு மனிதர்​களை அனுப்​பும் ககன்​யான் திட்​டத்தை சாத்​தி​ய​மாக்​கு​வதற்​கான அனைத்து பணி​களை​யும் மேற்​கொண்டு வரு​கிறோம். முன்​ன​தாக, 3 ஆளில்லா விண்​கலன்​களை விண்​வெளிக்கு அனுப்ப வேண்​டும். அதில் முதலா​வது கலனை மார்ச் மாதத்​துக்​குள் அனுப்​பவதற்​கான பணி​கள் நடை​பெற்று வரு​கின்​றன.

அடுத்த 5 ஆண்​டு​களில 50 விண்​வெளி திட்​டங்​களை செயல்​படுத்த பிரதமர் இலக்கு நிர்​ண​யித்​துள்​ளார். அதற்​காக தீவிர​மாக பணி​யாற்றி வரு​கிறோம். இவ்​வாறு அவர் கூறி​னார். எல்​விஎம்-3 ராக்​கெட் திட்ட இயக்​குநர் விக்​டர் ஜோசப், சிஎம்​எஸ்-3 செயற்​கைக்​கோள் திட்ட இயக்​குநர் ராஜேந்​திர குமார் உடனிருந்​தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x