Published : 03 Nov 2025 06:00 AM
Last Updated : 03 Nov 2025 06:00 AM

மரபை பேணிக்காப்பது ஆதீனங்கள்: ஆளுநர் ஆர்.என்.ரவி புகழாரம்

தருமபுரம் ஆதீனம் 27-வது குருமகா சந்நிதானம் கயிலை ல மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகளின் மணி விழாவையொட்டி நேற்று நடைபெற்ற மாநாட்டில் விழா மலரை ஆளுநர் ஆர்.என்.ரவி வெளியிட, தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் உள்ளிட்டோர் பெற்றுக் கொண்டனர். | படம்: வீ.தமிழன்பன் |

மயிலாடுதுறை: தரு​மபுரம் ஆதீனம் 27-வது குரு​மகா சந்​நி​தானம் கயிலை ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்​பந்த பரமாச்​சா​ரிய சுவாமிகளின் மணி​விழா நவ. 10-ம் தேதி நடை​பெற உள்​ளது. மணி​விழா மாநாட்டு நிகழ்​வு​கள் நேற்று முன்​தினம் தொடங்​கின. 2-வது நாளான நேற்று ‘சரபபுராணம்- மூல​மும் உரைநடைச் சுருக்​க​மும்’ நூல் வெளி​யீட்டு விழா நடை​பெற்​றது.

தொடர்ந்​து, நேற்று மாலை நடை​பெற்ற நிகழ்​வில் ஆளுநர் ஆர்​.என்​.ரவி மணி விழா சிறப்பு மலரை வெளி​யிட்​டு, மாற்​றுத் திற​னாளி​களுக்கு செயற்கை கால்​கள் வழங்​கும் நிகழ்வை தொடங்கி வைத்​தார். குன்​றக்​குடி திரு​வண்​ணா​மலை ஆதீனம் 46-வது குரு​மகா சந்​நி​தானம் தவத்​திரு குன்​றக்​குடி பொன்​னம்பல அடிகளார் மணி விழா மலரைப் பெற்​றுக்​கொண்​டார்.

பின்​னர், ஆளுநர் ஆர்​.என்​. ரவி பேசி​ய​தாவது: தரு​மபுரம் ஆதீனம் சமூகம், தேசம், சனாதன தர்​மத்​துக்கு 500 ஆண்​டு​களுக்​கும் மேலாக சிறப்​பாகப் பணி​யாற்றி வரு​கிறது. தமிழகம் ஒரு புண்​ணிய பூமி. சனாதனக் கொள்​கையை அழிய விடா​மல் பாது​காப்​ப​தில் ஆதீனங்​கள் முக்​கியப் பங்கு வகிக்​கின்​றன. மக்​களின் நம்​பிக்​கை​யை​யும், மரபை​யும், வழி​பாட்​டை​யும் தொடர்ந்து பேணிக்​காக்​கும் நிறு​வனங்​கள் ஆதீனங்​கள். இவ்​வாறு அவர் பேசி​னார்.

தரு​மபுரம் ஆதீனம் 27-வது குரு​மகா சந்​நி​தானம் கயிலை ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்​பந்த பரமாச்​சா​ரிய சுவாமிகள் ஆசி​யுரை வழங்​கி​னார்.மேகாலயா உயர் நீதி​மன்ற முன்​னாள் தலைமை நீதிபதி எஸ்​.​வைத்​தி​ய​நாதன், திருப்​பனந்​தாள் காசி மடம் 22-வது அதிபர் ஸ்ரீலஸ்ரீ காசி​வாசி சபாபதி தம்​பி​ரான் சுவாமிகள் மற்​றும் தமிழ் ஆர்​வலர்​கள் உள்​ளிட்​டோர் கலந்​து​கொண்​டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x