Published : 03 Nov 2025 12:23 AM
Last Updated : 03 Nov 2025 12:23 AM

அதிக எடை கொண்ட சிஎம்எஸ்-03 செயற்கைக்கோள் நிலைநிறுத்தம்: வெற்றிகரமாக விண்ணில் செலுத்தி இஸ்ரோ சாதனை

ஸ்ரீஹரிகோட்டா: கடற்​படை பயன்​பாட்​டுக்​கான சிஎம்​எஸ்​-03 செயற்​கைக்​கோள், எல்​விஎம்-3 ராக்​கெட் மூலம் திட்​ட​மிட்ட சுற்​றுப்​பாதை​யில் வெற்றிகர​மாக விண்​ணில் நிலைநிறுத்​தப்​பட்​டது. இதன்​மூலம் தனது வரலாற்​றில் புவிவட்ட சுற்​றுப்​பாதைக்கு அதி​கபட்ச எடை கொண்ட செயற்​கைக்​கோளை செலுத்தி இஸ்ரோ சாதனை படைத்​துள்​ளது.

அதிகஎடை கொண்ட செயற்​கைக்​கோள்​களை பிற நாடு​களின் உதவி கொண்டு விண்​னுக்கு அனுப்ப வேண்​டிய நிலையில் இஸ்ரோ இருந்​தது. அதனால் செல​வீனம் அதிகரிப் பதுடன், நேர விரயமும் ஏற்பட்​டது. இதையடுத்து அனைத்து ராக்​கெட்​களின் உந்து​விசைகளை அதி​கரிக்​கும் பணி​களை இஸ்ரோ முன்​னெடுத்​தது. அதன்​பல​னாக இஸ்​ரோ​வின் பாகுபலி எனப்​படும் எல்​விஎம்-3 ராக்​கெட்​டின் எஸ் 200 மோட்​டார்​கள், விகாஸ் இயந்​திரம், கிரையோஜெனிக் இயந்​திரம் ஆகிய​வற்​றின் திறன்​ மேம்​படுத்​தப்​பட்டு அதன் உந்​து​விசை வேக​மானது வழக்​கத்​தை​விட 14 விநாடிகள் வரை அதி​கரிக்​கப்​பட்​டது. இதையடுத்து எல்​விஎம்-3 ராக்​கெட் மூல​மாக 4,410 கிலோ எடை கொண்ட சிஎம்​எஸ்​-03 செயற்​கைக் கோளை விண்​ணில் புவி வட்​டப் பாதைக்கு செலுத்த இஸ்ரோ முடிவு செய்​தது.

இந்த ராக்​கெட் ஏவுதலுக்​கான 25 மணி நேர கவுன்ட்​ ட​வுன் நேற்றுமுன்​தினம் தொடங்​கியது. தொடர்ந்து ஆந்​திர மாநிலம் ஹரி​கோட்​டா​வில் உள்ள சதீஷ்தவான் மையத்​தின் 2-வது ஏவுதளத்​தில் இருந்து எல்​விஎம்-3 ராக்​கெட் நேற்று மாலை 5.26 மணிக்கு விண்​ணில் ஏவப்​பட்​டது. ராக்​கெட் தரை​யில் இருந்து புறப்​பட்ட 16 நிமிடத்​தில் செயற்​கைக் ​கோளை 169 கி.மீ உயரத்​தில் திட்​ட​மிட்ட புவிவட்ட பரி​மாற்ற சுற்​றுப்​பாதை​யில் வெற்​றிகர​மாகநிலைநிறுத்​தி​யது.

வரும் நாட்​களில் இதன் சுற்றுப்​பாதை படிப்படி​யாக மாற்​றப்​பட்டு குறைந்​த​பட்​சம் 170 கி.மீ.தூர​மும், அதி​கபட்​சம் 29,970 கி.மீ.தொலை​வும் கொண்ட புவிவட்டப் பாதை​யில் நிலைநிறுத்தப்பட உள்​ளது. இதன் ஆயுட்​காலம் 15 ஆண்​டு​கள். இதில் அதிநவீன தொழில்​நுட்​பங்​கள் உள்​ளன. இந்​திய நிலப்​பரப்பு மற்​றும் சுமார் 20 கி.மீ. பரப்​பளவு கொண்ட கடலோரப் பகு​தி​களை கண்​காணிக்க உதவும். அனைத்​து​வித​மான போர் விமானங்​கள், போர்க்கப்​பல்​கள், நீர்​முழ்கிக் கப்​பல்​கள்மற்​றும் தரை கட்​டுப்​பாடு மையங்​கள் இடையே​யான ஒருங்​கிணைந்த தகவல் தொடர்பு சேவையை மேம்​படுத்தி மிக​வும் பாது​காப்​பான​தாக வழங்​கும். போர்க்​காலங்​களில் இந்த செயற்​கைக்​கோளில் இருந்து கடற்​படை​யினர் நேரடி​யாகவே தகவல்​களை பெறலாம். இதனால் கால​விர​யம் தவிர்க்​கப்​படும். எதிரி நாடு​களின் கடல்​வழி ஊடுரு​வலை துல்​லிய​மாக கண்​காணிக்க முடி​யும்.

இதுத​விர கடற்​படை பயனுக்​காக மேலும் 1 செயற்​கைக்​கோள்விண்​ணில் செலுத்​தப்பட உள்​ளது குறிப்​பிடத்​தக்​கது. இந்த வெற்றி மூலம் இஸ்​ரோ​வின் ராக்​கெட் ஏவுதல் திறன்​கள் மேம்​படுத்​தப்​பட்​டுள்​ளன. இவை அடுத்த செயல்​படுத்​தப்பட உள்ள மனிதர்​களை விண்​ணுக்​கும் அனுப்​பும் ககன்​யான், சந்​திர​யான்-4 திட்​டங்​களுக்​கும் உந்​துதலாக இருக்​கும். மேலும், உள்​நாட்​டிலேயே அனைத்து தொழில்​நுட்ப வசதி​களை​யும் பெற்று விண்​வெளித் துறை​யில் தற்​சார்பு நிலையை விரை​வில்​ எட்​டு​வோம்​ என்​று இஸ்​ரோ விஞ்​ஞானிகள்​ நம்​பிக்​கை தெரிவித்​தனர்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x