Last Updated : 02 Nov, 2025 11:37 AM

2  

Published : 02 Nov 2025 11:37 AM
Last Updated : 02 Nov 2025 11:37 AM

கலகம் செய்வோருக்கு கழகத்தில் இடமில்லை! - திமுக முத்திரையுடன் திருப்பிவிடும் இபிஎஸ்

ஏற்​கெனவே ஓபிஎஸ், சசிகலா, தினகரனை அதி​முக​வுக்​குள் மீண்​டும் அரவணைக்க வாய்ப்​பில்லை என்று திட்​ட​வட்​ட​மாகச் சொல்​லி​விட்ட இபிஎஸ், செங்​கோட்​டையன் மீது கைவைத்​தால் என்​னாகுமோ என்​றெல்​லாம் யோசிக்​காமல் துணிச்​சலுடன் அவரைக் கட்​சியிலிருந்து நீக்கி தனது ஒற்​றைத் தலை​மை​யின் வலிமையை மற்​றவர்​களுக்​குப் புரிய​வைத்​திருக்​கி​றார்.

“களை​களை எடுத்​தால் தான் பயிர் செழிக்​கும். கட்​சி​யில் உள்ள களை​கள் அகற்​றப்​பட்​ட​தால் இனி கட்சி செழித்து வளரும்; ஆட்​சி​யிலும் அமரும்” என்று அழுத்​தம் திருத்​த​மாகச் சொல்லி இருக்​கும் இபிஎஸ், கட்​சி​யை​விட்டு நீக்​கப்​பட்ட ஓபிஎஸ், தினகரனை விட கட்​சிக்​குள் இருந்து கொண்டே தனக்கு எதி​ராகக் கலகக்​குரல் எழுப்​பிய செங்​கோட்​டைய​னைப் பற்றி தான் சற்றே கவலை கொண்​டார். இப்​போது அவரை​யும் கழற்​றி​விட்​டதன் மூலம், தனக்​கிருந்த இன்​னொரு தொல்​லை​யும் நீங்​கி​விட்​ட​தாக அவர் நிம்​மதி கொண்​டிருக்​கி​றார்.

அண்​மை​யில் தனது தென் மாவட்ட பிரச்​சா​ரப் பயணங்​களை வெற்​றிகர​மாக முடித்​திருப்​ப​தன் மூல​மும் இந்த ஆண்டு பசும்​பொன் தேவர் நினை​விடத்​துக்கு தடபுடலாகச் சென்று வந்​ததன் மூல​மும் தனக்கு எதி​ரான, ‘தேவரின மக்​களின் வாக்கு வங்​கி’ என்ற ஓபிஎஸ் - தினகரன் வகையறாக்​களின் தேர்​தல் பிரச்​சா​ரம் இனி எடு​ப​டாது என்று நிரூபித்​திருக்​கி​றார் இபிஎஸ்.

அதே​போல் கொங்கு மண்​டலத்​தில் செங்​கோட்​டைய​னுக்​கு, முன்​பிருந்த செல்​வாக்​கெல்​லாம் இல்லை என்​ப​தை​யும் தனது பிரச்​சா​ரப் பயணத்​தின் மூல​மும் பிரத்​யேக​மாக எடுக்​கப்​பட்ட சர்வே மூல​மும் உறுதி செய்​து​கொண்​டிருக்​கும் இபிஎஸ், கட்சி முழு​மை​யாக தனது கட்​டுப்​பாட்​டுக்​குள் இருப்ப​தால் இனி யாரை நினைத்​தும் கவலைப்​படத் தேவை​யில்லை என்ற முடிவுக்கு வந்​திருக்​கி​றார். அதனால் தனக்கு எதி​ரான ‘கல​கக்​காரர்​களை’ கழகத்​தினர் மத்​தி​யில் அம்​பலப்​படுத்​த​வும் துணிந்​து​விட்​டார் அவர்.

தினகரன், ஓபிஎஸ் ஆகி​யோரின் அண்​மைக்​கால திமுக ஆதரவு நடவடிக்​கை​களை வைத்து அவர்​களை திமுக​வின் ‘பி டீம்’ என விமர்​சித்து வந்த இபிஎஸ், இப்​போது இந்​தக் கூட்​ட​ணிக்​குள் செங்​கோட்​டைய​னின் பெயரை​யும் சேர்த்து அதி​முக​வினர் மத்​தி​யில் அவருக்கு இருக்​கும் எம்​ஜிஆர் காலத்து விசு​வாசி என்ற பிம்​பத்​தை​யும் தந்​திர​மாக சரித்​திருக்​கி​றார்.

தனது இந்த ராஜதந்​திர நடவடிக்​கை​களால், உண்​மை​யான அதி​முக விசு​வாசிகள் யாரும் இனி இந்த மூவர் கூட்​டணி பேச்சை நம்பி அவர்​கள் பின்னால் போக​மாட்​டார்​கள் என நம்​பும் இபிஎஸ், கட்​சிக்கு உள்​ளே​யும் வெளி​யே​யும் இருந்து கொண்டு தன்னை நெருஞ்​சி​யாய் குத்​திக் கொண்டிருந்த முட்​களை​யும் திமுக முத்​திரை குத்தி பொசுக்​கி​விட்​ட​தாக நிம்​மதி கொண்​டிருக்​கிறார்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x