Published : 02 Nov 2025 12:25 AM
Last Updated : 02 Nov 2025 12:25 AM

திமுக ஆட்சி முடிவதற்கான ‘கவுன்ட் டவுன்’ தொடங்கிவிட்டது - நயினார் நாகேந்திரன் கருத்து 

தஞ்சாவூர்: தமிழகத்​தில் திமுக ஆட்சி முடிவதற்​கான `கவுன்ட் டவுன்' தொடங்​கி​விட்​டது என பாஜக மாநிலத் தலை​வர் நயி​னார் நாகேந்​திரன் கூறி​னார்.

ராஜ​ராஜ சோழனின் 1040-வது சதய விழாவை முன்​னிட்​டு, தஞ்​சாவூரில் நேற்று அவரது சிலைக்கு பாஜக சார்​பில் மாலை அணி​வித்து மரி​யாதை செலுத்​திய நயி​னார் நாகேந்​திரன், பின்​னர் செய்​தி​யாளர்​களிடம் கூறியது: பெரிய கோயிலுக்கு வெளியே உள்ள ராஜ​ராஜ சோழன் சிலையை கோயிலுக்கு உள்ளே வைப்​பது குறித்து தலை​வர்​களிடம் ஆலோ​சித்​து, அதனடிப்​படை​யில் மத்​திய அரசுக்​குப் பரிந்​துரை செய்​வோம்.

நெல் கொள்​முதல் நிலை​யங்​களில் நெல் மூட்​டைகள் தேக்​கமடைந்​துள்​ளன. நெல்​மணி​கள் முளைத்து வீணாகி வரு​கின்​றன. விவ​சா​யிகள் போராட்​டம் நடத்தி வரு​கின்​றனர். ஆனால், இதுகுறித்து கவலைப்​ப​டா​மல் முதல்​வரும், துணை முதல்​வரும் சினிமா பார்த்​துக் கொண்​டிருக்​கின்​றனர். திமுக ஆட்சி முடிய இன்​னும் 140 நாட்​கள்​தான் உள்​ளன. இதற்​கான கவுன்ட் டவுன் தொடங்​கி​விட்​டது. வரும் தேர்​தலில் தேசிய ஜனநாயக கூட்​டணி கண்​டிப்​பாக வெற்றிபெறும். இவ்​வாறு அவர் கூறி​னார்.

முன்​ன​தாக, கும்​பகோணத்​தில் செய்​தி​யாளர்​களிடம் நயி​னார் நாகேந்​திரன் கூறிய​தாவது: கும்​பகோணத்​தில் ஏராள​மான கோயில் கோபுரங்​கள் சேதமடைந்து இடிந்​து​விழும் நிலை​யில் உள்​ளன. அவற்றை சரிசெய்​வது குறித்து அறநிலை​யத் துறை அமைச்​சர் சேகர்​பாபு சிந்​திக்க வேண்​டும். அதை விட்​டு​விட்டு மாற்​றுக் கட்​சி​யின் பிரச்​சினை குறித்து அவர் பேச வேண்​டிய அவசி​யம் இல்​லை. மழை​யால் பாதிக்​கப்​பட்ட விவ​சா​யிகளுக்கு குறைந்​த​பட்​சம் ஏக்​கருக்கு ரூ.30 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்​டும். இவ்​வாறு நயினார் நாகேந்திரன் கூறி​னார்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x