Published : 01 Nov 2025 05:44 AM
Last Updated : 01 Nov 2025 05:44 AM

பக்கவாதம் அறிகுறிகள் ஏற்பட்டால் நான்கரை மணி நேரத்தில் சிகிச்சை: அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை இயக்குநர் அறிவுறுத்தல்

உலக பக்கவாத நோய் விழிப்புணர்வு தினத்தையொட்டி, சென்னை அண்ணா சாலையில் உள்ள அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில், மருத்துவமனை இயக்குநர் ஆர்.மணி தலைமையில் நடைபெற்ற விழிப்புணர்வு பேரணியில் நரம்பியல் துறை தலைவர் மருத்துவர் ஏ.நித்தியானந்தம், மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவ மாணவர்கள், ஊழியர்கள் பங்கேற்றனர்.

சென்னை: பக்​க​வாதம் அறிகுறிகள் ஏற்​பட்​டால் நான்​கரை மணி நேரத்​தில் சிகிச்சை பெற வேண்​டும். தவறி​னால் வாழ்க்​கையே கேள்விக்​குறி​யாகி​விடும் என அரசு பன்​னோக்கு உயர் சிறப்பு மருத்​து​வ​மனை இயக்​குநர் ஆர்​.மணி தெரி​வித்​தார். சென்னை அண்ணா சாலை​யில் உள்ள அரசு பன்​னோக்கு உயர் சிறப்பு மருத்​து​வ​மனை​யில் உலக பக்​க​வாத நோய் விழிப்​புணர்வு தினம் அனுசரிக்​கப்​பட்​டது.

மருத்​து​வ​மனை இயக்​குநர் மருத்​து​வர் ஆர்​.மணி தலை​மை​யில் நடந்த நிகழ்​வில் நரம்​பியல் துறைத் தலை​வர் மருத்​து​வர் ஏ.நித்​தி​யானந்​தம், பல துறையைச் சேர்ந்த மருத்​து​வர்​கள், செவிலியர்​கள், மருத்​துவ மாணவர்​கள், மருத்​து​வ​மனை ஊழியர்​கள் மற்​றும் பொது​மக்​கள் பங்​கேற்​றனர். முதலில் மருத்​து​வ​மனை​யில் அனை​வரும் பேரணி​யாகச் சென்று பக்​க​வாத நோய் வராமல் தடுப்​பது குறித்​தும், வந்​தால் என்ன செய்ய வேண்​டும் என்​பது குறித்​தும் நோயாளி​கள் மற்​றும் பொது​மக்​களுக்கு விழிப்​புணர்வு ஏற்​படுத்​தினர்.

நிகழ்​வில் மருத்​து​வ​மனை இயக்​குநர் மருத்​து​வர் ஆர்​.மணி பேசி​ய​தாவது: மூளை ரத்த ஓட்​டத்​தில் திடீரென ஏற்​படும் தடை​யால் கை, கால் செயலிழப்பு மற்​றும் பிற அறிகுறிகள் தோன்​று​வதே பக்​க​வாதம் ஆகும். இது ரத்த அடைப்​பாலோ வெடிப்​பாலோ ஏற்​படு​கிறது.

திடீரென ஒரு​புற​மாக ஏற்​படும் கை கால் பலவீனம், கை கால் மரத்​துப்​போகுதல், நடப்​ப​தில் தள்​ளாட்​டம், பேச்சு குளறு​தல், பிறர் பேசுவதைப் புரிந்​து​கொள்​வ​தில் சிரமம், வாய் கோணலாகுதல், விழுங்​கு​வ​தில் சிரமம் மற்​றும் பார்வை மறைத்​தல் போன்​றவை பக்​க​வாதத்​தின் அறிகுறிகளாகும். ரத்​தக் கொதிப்​பு, சர்க்​கரை நோய், கொழுப்​புச் சத்து மிகுந்த நிலை, புகைப்​பழக்​கம், மதுப்​பழக்​கம், உடற்​ப​யிற்சி இல்​லாத வாழ்க்கை முறை, போதைப் பொருட்​களை உபயோகித்​தல் ஆகியவை பக்​க​வாதம் வரு​வதற்​கான முக்​கிய காரணங்​கள் ஆகும்.

பக்​க​வாத அறிகுறிகள் வந்​தால் தாம​திக்​காமல் முதல் நான்​கரை மணி நேரத்​துக்​குள் அரு​கில் உள்ள அரசு மருத்​து​வ​மனைக்​குச் செல்ல வேண்​டும். ரத்​த​நாள அடைப்பு உறுதி செய்​யப்​படும் பட்​சத்​தில் ‘தி​ராம்​போலைசிஸ்’ எனும் சிகிச்​சை​யின் மூலம் அந்த அடைப்பை கரைக்க முடி​யும். இதன் மூலம் கை, கால் செயலிழப்பு ஏற்​ப​டா​மல் காத்​துக்​கொள்​ளலாம். நான்​கரை மணி நேரத்தை கடந்து வரும்​போது, அந்​நோயி​லிருந்து மீண்டு வரு​வதற்​கான வாய்ப்​பு​கள் மிக​வும் குறை​வாகும்.

இதனால், நம் வாழ்​நாள் முழு​வதும் நிரந்தர முடக்க நிலைக்​குத் தள்​ளப்​படு​வோம். நம் வாழ்​வா​தா​ரம் பாதிக்​கப்​படும். அனை​வரும் உடற்​ப​யிற்சி செய்ய வேண்​டும். தின​மும் நடைப்​ப​யிற்சி அரைமணி நேரம் மேற்​கொண்​டால், நமது உடலில் உள்ள கொழுப்​புச் சத்​து, உப்பு மற்​றும் சர்க்​கரைச் சத்து அளவு​கள் கட்​டுக்​குள் வரக்​கூடும். அனைத்து ரத்த நாளங்​களும் விரிவடை​யும். மனிதனுக்கு நல்ல உறக்​கம் அவசி​யம். தின​மும் 6-8 மணி நேரம் தூங்​கும்​போது மூளை நரம்​பு​கள் அனைத்​துக்​கும் ஓய்வு கிடைக்​கும்​. இவ்​வாறு அவர்​ தெரி​வித்​தார்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x