Published : 01 Nov 2025 06:29 AM
Last Updated : 01 Nov 2025 06:29 AM

இந்தியாவில் கடும் வறுமை இல்லாத முதல் மாநிலமாகும் கேரளா: பினராயி விஜயனுக்கு சண்முகம் பாராட்டு

சென்னை: இந்​தி​யா​வில் கடும் வறுமை இல்​லாத முதல் மாநில​மாக கேரள அறிவிக்​கப்பட உள்​ளது. இதையொட்டி அம்மாநில முதல்வர் பினராயி விஜயனுக்​கு, மார்க்​சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செய​லா​ளர் பெ.சண்​முகம் பாராட்டு தெரி​வித்​துள்​ளார்.

இதுதொடர்​பாக அவர் எழு​திய வாழ்த்​துக் கடிதம்: இந்​தி​யா​வின் முதல் கடும் வறுமை இல்​லாத முதல் மாநில​மாக கேரளா நவ.1-ம் தேதி அதி​காரப்​பூர்​வ​மாக அறிவிக்​கப்​பட​வுள்​ளது. சமூகநீதிக் களத்​தில் இது மகத்​தான மைல்​கல்​லாகும். கேரளாவின் இந்த வெற்​றி, இது மனித மாண்​புக்​கான ஒரு புரட்சி ஆகும்.

இதற்காக மேற்​கொள்ளப்​பட்ட கணக்​கெடுப்​பு மூலம் கடும் வறுமையில் தவிக்​கும் 64,006 குடும்​பங்​கள் துல்​லியமாக அடை​யாளம் காணப்​பட்டு, உணவு, ஆரோக்​கியம், வீடு, வாழ்வாதாரம் ஆகியவற்றை மையமாக கொண்ட ஒருங்​கிணைந்த தலை​யீடு​கள் மூலம் வறுமை​யின் பன்முகத்தன்​மைக்கு தீர்வு காணப்​பட்​டுள்​ளது.

அதற்​கேற்ப ஒவ்​வொரு குடும்​பத்​தின் தேவைக்​கேற்ப நுண் திட்​டங்​கள் வகுக்​கப்​பட்​டிருப்​பதும் பாராட்​டுக்குரியது. 1957 நிலச்சீர்​திருத்​தங்​கள் முதல் பரவலாக்​கப்​பட்ட ஜனநாயகம் வரை​யில் இடது​சா​ரி​களால் வெற்​றிகர​மாக முன்​னெடுக்​கப்​பட்ட பல்லாண்டு கால சமூக மாற்​றத்​தின் உச்​சமே இந்த வெற்​றி​யாகும். கடும் வறுமை என்பது தவிர்க்க முடி​யாத விதி அல்ல. அரசி​யல் உறு​திப்​பாட்​டால் ஒழிக்கப்பட வேண்​டிய ஒரு சமூக அவலம் என்​பது நிரூபிக்கப்பட்டுள்​ளது.

அந்​தவகை​யில் இந்​தி​யா​வுக்கே வழி​காட்​டும் ஒரு புதிய சோசலிச முன்​மாதிரியை கேரளா நிறு​வி​யுள்ளது. இந்த வரலாற்றுச் சாதனைக்காக முதல்​வர் பின​ராயி விஜயன் தலை​மையி​லான இடது ஜனநாயக முன்​னணி அரசு மேற்​கொண்ட அயராத முயற்சிகளுக்கு பாராட்​டு​கள். இவ்​வாறு அதில் தெரி​வித்​துள்​ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x