Published : 01 Nov 2025 12:40 AM
Last Updated : 01 Nov 2025 12:40 AM
சென்னை: தகவல் பெறும் உரிமை சட்டத்தின்கீழ் மனுக்களை இணையவழியில் பெறும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டிருப்பதாக டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக டிஎன்பிஎஸ்சி செயலாளர் எஸ்.கோபால சுந்தரராஜ் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: தேர்வர்களுக்கான சேவைகளை இணைவழியில் வழங்கும் விதமாக தகவல்பெறும் உரிமைச் சட்டத்தின்கீழ் மனுக்களை இணையவழியில் பெறும் வசதி தற்போது ஏற்படுத்தப்பட்டுள்ளது.
தேர்வர்கள் இச்சட்டத்தின்கீழ் மனுக்கள் மற்றும் மேல்முறையீட்டு மனுக்களை https://rtionline.tn.gov.in/ என்ற இணையதளத்தை பயன்படுத்தி இணையவழியில் சமர்ப்பிக்கலாம். எனவே, தேர்வர்கள் தகவல் பெறும் உரிமை சட்டத்தின்கீழ் மனுக்கள் மற்றும் மேல் முறையீடு்களை தேர்வாணை யத்துக்கு தபால் மூலம் அனுப்புவதை தவிர்க்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT