Published : 01 Nov 2025 12:14 AM
Last Updated : 01 Nov 2025 12:14 AM

அதிமுகவில் இருந்து செங்கோட்டையன் நீக்கம் - முழு விவரம்

சென்னை: அதிமுகவில் இருந்து முன்னாள் அமைச்சர் செங்​கோட்​டையனை நீக்​கி, பழனி​சாமி உத்​தர​விட்​டுள்​ளார்.

அதி​முக​வில் எம்​ஜிஆர் காலத்து தலை​வர்​களில் ஒரு​வ​ராக​வும், கொங்கு மண்​டலத்​தில் அனை​வரின் நன்​ம​திப்பை பெற்ற தலை​வ​ராக​வும் முன்​னாள் அமைச்​சர் செங்​கோட்​டையன் உள்​ளார். கடந்த பிப்​.9-ம் தேதி கோவை​யில் அத்​திக்​கட​வு- அவி​நாசி திட்​டத்தை செயல்​படுத்​தி​யதற்​காக விவ​சாய அமைப்​பு​கள் சார்​பில் அதிமுக பொதுச் செயலாளர் பழனி​சாமிக்கு பாராட்டு விழா நடத்​தினர். அதற்​கான அழைப்​பிதழ், பேனர்​களில் எம்​ஜிஆர், ஜெயலலிதா படம் இல்லை என்று ​கூறி, விழாவை செங்​கோட்​டையன் புறக்கணித்​தார்.

பின்​னர், அதி​முக - பாஜக கூட்​டணி அமைந்த பிறகு, கடந்த செப்​டம்​பர் மாதம், ‘அதிமுகவில் இருந்து வெளியே சென்​றவர்​களை அரவணைக்க வேண்​டும்' என்று கூறிய செங்​கோட்​டையன் அதற்கு 10 நாட்​கள் கெடு​வும் விதித்​தார். அதைத் தொடர்ந்​து, அவரது அமைப்புச் செய​லா​ளர், மாவட்டச் செய​லா​ளர் பதவி​கள் பறிக்​கப்​பட்​டன.

இந்​நிலை​யில், கட்சி ஒருங்​கிணைப்பை வலி​யுறுத்திவரும் டிடிவி. தினகரன், ஓ.பன்​னீர்​செல்​வம் ஆகியோ​ருடன் பசும்​பொன்​னில் நேற்று முன்​தினம் நடை​பெற்ற தேவர் ஜெயந்தி விழா​வில் செங்​கோட்​டையனும் பங்​கேற்றது கட்சி வட்டாரத்தில் சலசலப்பை ஏற்​படுத்​தியது. இதைத் தொடர்ந்​து, பழனி​சாமி தலை​மை​யில் சேலத்​தில், கட்​சி​யின் மூத்த நிர்​வாகி​களு​டன் நேரிலும், தொலைபேசி​யிலும் ஆலோ​சனை நடத்​தப்​பட்​டது. இதன்பின்னர், செங்​கோட்​டையனை கட்​சி​யின் அடிப்​படை உறுப்​பினர் பொறுப்​பில் இருந்து நீக்கி பழனி​சாமி நேற்று உத்​தர​விட்​டுள்​ளார்.

அவர் வெளியிட்ட அறிக்​கை​யில் கூறி​யிருப்​ப​தாவது: கட்சியின் சட்ட திட்​டங்​களுக்கு மாறு​பட்​டு, ஒழுங்​குமுறை குலை​யும் வகை​யில் நடந்​து​கொண்​ட​தா​லும், கட்​சி​யில் இருந்து நீக்​கப்​பட்​ட​வர்​களு​டன் தொடர்பு வைத்​துக்கொள்​ளக்கூடாது என்று தெரிந்தும், அவர்களு​டன் ஒன்றிணைந்​து, கட்சியின் கண்​ணியத்​துக்கு மாசு ஏற்​படும் வகை​யில், களங்​க​மும், அவப்பெயரும் உண்​டாகும் விதத்தில் செயல்​பட்டு வருவதாலும் ஈரோடு புறநகர் மேற்கு மாவட்​டத்​தை சேர்ந்த கே.ஏ.செங்​கோட்​டையன், இன்று முதல் கட்சியின் அடிப்​படை உறுப்​பினர் பொறுப்பு உட்பட அனைத்​துபொறுப்​பு​களில் இருந்​தும் நீக்​கப்​படு​கிறார். கட்சியினர் அவருடன் எந்த தொடர்​பும் வைத்​துக்​கொள்​ளக் கூடாது. இவ்​வாறு அறிக்​கை​யில் கூறப்​பட்​டுள்​ளது. கட்​சியில் இருந்து நீக்​கியது தொடர்​பாக இன்று விரி​வாக பேச இருப்​ப​தாக செங்​கோட்​டையன்​ கூறி​யுள்​ளார்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x