Published : 31 Oct 2025 06:10 AM
Last Updated : 31 Oct 2025 06:10 AM

நில அளவையர் காலிப் பணியிடங்களை விரைவில் நிரப்ப அரசுக்கு கோரிக்கை

சென்னை: நில அளவையர் காலிப் பணி​யிடங்​களை நிரப்​புவது உள்​ளிட்ட 14 அம்ச கோரிக்​கைகளை விரை​வில் நிறைவேற்ற வேண்​டும் என்று தமிழ்​நாடு நில அளவை அலு​வலர் ஒன்​றி​யம் அரசுக்கு கோரிக்கை விடுத்​துள்​ளது.

இதுகுறித்​து, தமிழ்​நாடு நில அளவை அலு​வலர் ஒன்​றி​யம் வெளி​யிட்​டுள்ள அறிக்​கை​யில் கூறிருப்​ப​தாவது: தமிழகத்​தில் 6 கோடிக்கு மேல் உள்ள பட்​டா​தா​ரர்​களின் நிலங்​கள் மனை​களை அளக்க வேண்​டிய பொறுப்பு 3999 சர்வே அலு​வலர்​களைச் சாரும்.

இதி​லும் துணை ஆய்​வாளர் முதல் கூடு​தல் இயக்​குநர் வரை உள்ள மேற்​பார்வை, நிர்​வாக நிலைஅலு​வலர்​கள் நீங்​கலாக 3517 பேரில் காலிப் பணி​யிடங்​கள் 1375 போக மீத​முள்​ள2142 சர்வே ஊழியர்​கள் மட்​டும்​தான் இந்​த​பெரும் பணியை செய்ய வேண்​டி​யுள்​ளது.

மேலும் கணினிமய​மாக்​கம் மூலம் துறை​யின் நடவடிக்​கைகள் இணை​ய​வழிக்கு மாறிய​போதும், கைப்​பிர​தி​களை தயார் செய்​வதும் அதனை இணைய வழி​யில் பதிவேற்​றம் செய்ய வேண்​டிய நிர்ப்​பந்​த​மும் உரு​வா​யிற்​று. இச்​சூழல் சர்​வேயர்​களின் பணியை இரட்​டிப்​பாக்​கி​யுள்​ளது. புதிய பணி​கள் வழங்​கப்​பட்​டாலும் புதிய பணி​யிடங்​கள் ஏதும் ஏற்​படுத்​த​வில்​லை.

இந்​நிலை​யில், வெளி முகமை மூலம் 592 பணி​யாளர்​கள் ஜிஎஸ்டி செலுத்தி கூலி பெறும் நிலையை அரசு உரு​வாக்​கி​யுள்​ளது. ஏற்​கெனவே காலிப்​பணி​யிடங்​களை நிரப்ப வேண்​டும், புதிய பணி​யிடங்​களை நிரப்ப வேண்​டும் என்​பது உள்​ளிட்ட 14 அம்ச கோரிக்​கைகள் கிடப்​பில் உள்​ளன. அரசின் இந்த அணுகு​முறை, போராட்​டத்​துக்கு வலுக்​கட்​டாய​மாக உந்தி தள்​ளுவ​தாகவே நாங்​கள் உணர்​கிறோம். இவ்​வாறு அதில் கூறப்​பட்​டுள்​ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x