Published : 30 Oct 2025 06:45 AM
Last Updated : 30 Oct 2025 06:45 AM

மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் மூலம் 1,429 சுகாதார ஆய்வாளர்கள் விரைவில் நியமனம்

சென்னை: விரை​வில் நியமிக்​கப்பட உள்​ள 1,429 சுகா​தார ஆய்​வாளர்​கள் (கிரேடு-2) பணிக்கு நவம்​பர் 16-ம் தேதிக்​குள் ஆன்​லைனில் விண்​ணப்​பிக்க வேண்​டும் என்று அறிவிக்​கப்​பட்​டுள்​ளது.

இதுதொடர்​பாக தமிழ்​நாடு மருத்​து​வப் பணி​யாளர் தேர்வு வாரி​யத்​தின் தலை​வர் வெளி​யிட்​டுள்ள அறி​விப்​பு: தமிழ்​நாடு பொது சுகா​தார சார்​நிலைப் பணி​யின்​கீழ் வரும் சுகா​தார ஆய்​வாளர் (கிரேடு-2) பதவி​யில் 1,429 காலி இடங்​கள் நேரடி நியமன முறை​யில் நிரப்​பப்பட உள்​ளன. இதற்கு ஆன்​லைனில் விண்​ணப்​பங்​கள் வரவேற்​கப்​படு​கின்​றன. இந்த பதவிக்கு ஆண்​கள் மட்​டுமே விண்​ணப்​பிக்க முடி​யும்.

விண்​ணப்​ப​தா​ரர் உயி​ரியல் அல்​லது தாவர​வியல் மற்​றும் விலங்​கியல் பாடங்​களு​டன் பிளஸ் 2 முடித்​து, அதோடு தமிழ்​நாடு பொது சுகா​தா​ரம் மற்​றும் தடுப்பு மருந்து இயக்​குந​ரால் வழங்​கப்​பட்ட 2 ஆண்டு கால பல்​நோக்கு சுகா​தா​ரப் பணி​யாளர் சான்​றிதழ் அல்லது சுகா​தார ஆய்​வாளர் சான்​றிதழ் வைத்​திருக்க வேண்​டும். 10-ம் வகுப்பு பொதுத் தேர்​வில் தமிழை ஒரு பாட​மாக எடுத்து படித்​திருக்க வேண்​டியது அவசி​யம்.

பொதுப் பிரி​வினர் உள்​ளிட்ட அனைத்து வகுப்​பினருக்​கும் வயது வரம்பு கட்​டுப்​பாடு ஏதும் கிடை​யாது. கட்​டாய தமிழ் மொழி தகுதித் தாள் தேர்​விலும் தேர்ச்சி பெற வேண்​டியது அவசி​யம்.

கரோனா கால​கட்​டத்​தில் பணி​யாற்​றிய​வர்​களுக்​கு, பணிக்​காலத்​துக்கு ஏற்ப 2 முதல் 5 சிறப்பு மதிப்​பெண் வழங்​கப்​படும். எனவே, தகுதி உள்ள ஆண்​கள் www.mrb.tn.gov.in என்ற இணை​யதளம் மூல​மாக நவம்​பர் 16-ம் தேதிக்​குள் ஆன்​லைனில் விண்​ணப்​பிக்க வேண்டும். போட்​டித் தேர்வு நடை​பெறும் தேதி பின்​னர் அறிவிக்​கப்​படும்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x