Published : 30 Oct 2025 06:32 AM
Last Updated : 30 Oct 2025 06:32 AM

கோயில் நிதி மற்றும் நிலங்கள் தொடர்பாக இணையத்தில் வெளிப்படையாக பதிவேற்றம் செய்யத் தயங்குவது ஏன்? - அறநிலையத் துறைக்கு கோர்ட் உத்தரவு

சென்னை: கோ​யில் நிலங்​களை இணை​யத்​தில் வெளிப்​படை​யாக பதிவேற்​றம் செய்​வதற்கு அறநிலை​யத் துறை தயங்​கு​வது ஏன் என கேள்வி எழுப்​பி​யுள்ள உயர் நீதி​மன்ற நீதிப​தி, இதுதொடர்​பாக விரி​வாக பதில்​மனு தாக்​கல் செய்ய அறநிலை​யத் துறைக்கு உத்​தர​வி்ட்​டார்.

தகவல் அறி​யும் உரிமைச் சட்​டத்​தின்​கீழ் தமிழகம் முழு​வதும் உள்ள கோயில்​கள், மடங்​கள், கட்​டளை​களுக்கு சொந்​த​மாக உள்ள சொத்​து​கள், நிதி மற்​றும் நிலங்​கள் தொடர்​பான, அறநிலை​யத் துறை​யின் உத்​தர​வு​கள், அரசாணை​கள், டெண்​டர் அறிவிக்​கைகளை இணை​யத்​தி்ல் வெளிப்​படை​யாக வெளி​யிடக்​கோரி ஆலய வழிபடு​வோர் சங்​கத் தலை​வ​ரான மயி​லாப்​பூரைச் சேர்ந்த டி.ஆர்​.ரமேஷ் சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் வழக்கு தொடர்ந்​திருந்​தார்.

இந்த வழக்கு நீதிபதி வி.லட்​சுமி​நா​ராயணன் முன்​பாக நேற்று மீண்​டும் விசா​ரணைக்கு வந்​தது. அப்​போது மனு​தா​ரர் தரப்​பி்ல் வழக்​கறிஞர் பி.ஜெகந்​தாத், அறநிலை​யத் துறை தரப்​பில் சிறப்பு அரசு வழக்​கறிஞர் என்​.ஆர்​.ஆர்​.அருண் நடராஜன், மாநில தகவல் ஆணை​யம் தரப்​பில் வழக்​கறிஞர் விக்​னேஸ்​வரன் சந்​திரசேகர் ஆகியோர் ஆஜராகி வாதிட்​டனர்.

அப்​போது அறநிலை​யத்​துறை தரப்​பில், ‘‘கோ​யில் நிலங்​கள் தொடர்​பான ஆவணங்​களை இணை​யத்​தில் பதிவேற்​றம் செய்​தால் அதன்​மூல​மாக முறை​கேடு​கள் நடை​பெற வாய்ப்​புள்​ளது. ஏற்​கெனவே வரு​வாய்த் துறை​யின் தமிழ் நிலம் என்ற இணை​யதளம் வாயி​லாக தமிழகத்​தில் உள்ள நிலங்​களின் வகைப்​பாடு உள்​ளிட்ட அனைத்து விவரங்​களை​யும் அறிய முடி​யும்” என தெரிவிக்​கப்​பட்​டது.

அப்​போது குறுக்​கிட்ட நீதிப​தி, ‘‘தமிழகம் முழு​வதும் கோயில்​களுக்கு சொந்​த​மான நிலங்​களை இணை​யத்​தில் வெளிப்​படை​யாக பதிவேற்​றம் செய்​வதற்கு அறநிலை​யத் துறை தயங்​கு​வது ஏன்? சொத்​து​கள் தொடர்​பான விவரங்​களை பதிவேற்​றம் செய்​வ​தில் என்ன சிக்​கல் உள்​ளது? கோயில் சொத்​துக்​களை எல்​லோரும் தெரிந்து கொள்​ளும் வண்​ணம் அறி​வி்த்​தால் நிலங்​களை வாங்​குபவர்​கள் எச்​சரிக்​கை​யாக இருப்​பார்​களே? மனு​தா​ரர் கோரி​யுள்ள விவரங்​களில் தணிக்கை அறிக்​கைகளும் அடங்​கும்.

அவற்றை வெளி​யிடு​வ​தில் என்ன பிரச்னை உள்​ளது? அறநிலை​யத் துறை ஆணை​யரின் தனிப்​பட்ட விவரங்​களை ஒன்​றும் மனு​தா​ரர் கோர​வில்​லை​யே” என கேள்வி எழுப்​பி​னார். பின்​னர் மனு​தா​ரர் கோரி​யுள்ள அனைத்து விவரங்​களும் சட்​டரீ​தி​யாக பொது ஆவணங்​கள். அவற்றை வெளி​யிட முடி​யாது என மறுக்க முடி​யாது. எனவே எந்​தெந்த தகவல்​கள் பதிவேற்​றம் செய்ய முடி​யும், எவை பதிவேற்​றம் செய்​யப்​பட்​டுள்​ளது என்​பது குறித்து விரி​வான பதில்​மனு தாக்​கல் செய்ய அறநிலை​யத் துறைக்கு உத்​தர​விட்டு வி​சா​ரணையை வரும் நவ.12-ம் தேதிக்கு தள்​ளி​வைத்​தார். பதில் மனுவை முன்​கூட்​டியே மனு​தா​ரருக்​கும்​ வழங்​க உத்​தர​விட்​டுள்​ளார்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x