Published : 30 Oct 2025 06:49 AM
Last Updated : 30 Oct 2025 06:49 AM

3 இடங்களில் மக்கள்தொகை கணக்கெடுப்பு முன் சோதனை பணி: நவ.1 முதல் தொடங்கவுள்ளதாக தமிழக அரசு அறிவிப்பு

கோப்புப்படம்

சென்னை: தமிழகத்​தில் கிருஷ்ணகிரி, திரு​வள்​ளூர், காஞ்​சிபுரம் மாவட்​டங்​களில் 3 இடங்​களில் மக்​கள் தொகை கணக்​கெடுப்​புக்​கான முன் சோதனை பணி​கள் நவ.1 முதல் தொடங்கி பல வகைப்​பாடு​களில் அம்​மாதம் இறு​திவரை நடை​பெற உள்ள​தாக தமிழக அரசு அறவித்​துள்​ளது.

இதுகுறித்து தமிழக அரசு வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பு: மத்​திய அரசு வரும் 2027-ம் ஆண்டு மக்​கள் தொகை கணக்கெடுப்பு நடத்துவது குறித்​து, கடந்த ஜூன் மாதம் அறி​வித்​தது. இந்த அறி​விப்பு தமிழக அரசின் அரசிதழில் கடந்த ஜூலை 16-ம் தேதி வெளி​யிடப்​பட்​டது. மக்​கள் தொகை கணக்​கெடுப்​புச் சட்​டப்​படி, கடந்த அக்​.16-ம் தேதி மத்​திய அரசின் அரசிதழில் வெளி​யிடப்​பட்ட அறி​விப்​பின்​படி, 2027-ம் ஆண்​டுக்​கான இந்​திய மக்​கள் தொகை கணக்​கெடுப்​புக்​கான முன் சோதனை நடத்த இருக்​கிறது.

இது, 2027-ல் நடை​பெறவுள்ள மக்​கள்தொகை கணக்​கெடுப்​புக்கு முன்​ நடத்​தப்​படும் ஒரு முக்​கிய முன்​னோட்​டம் மற்​றும் ஆயத்​தப் பணி​யாகும்.
இது இந்​தி​யா​வின் முதல் முழு​மை​யான டிஜிட்​டல் கணக்​கெடுப்​பாகும். இந்த முன்​சோதனை​யின் முடிவு​கள், எதிர்​நோக்​க​விருக்​கும் செயல்​பாட்டு சவால்​களை அறிந்து அவற்றை நிவர்த்தி செய்ய உதவும்.

முதல்​முறை​யாக, செல்போன் செயலிகளைப் பயன்படுத்தி தரவு​கள் சேகரிக்​கப்படு​வதுடன், மக்​கள் தொகை கணக்கெடுப்பு மேலாண்மை மற்​றும் கண்​காணிப்பு அமைப்பு (CMMS) வலைதளம் மூலம் இந்த செயல்​பாடு​கள் நிர்​வகிக்​கப்​படும். முதல்​கட்​ட​மான வீட்​டுப்​பட்​டியல் மற்​றும் வீடு​கள் கணக்​கெடுப்​புக்​கான முன் சோதனை வரும் நவ.10 முதல் 30-ம் தேதி வரை நடை​பெறுகிறது. அத்துடன் நவ.1 முதல் 7-ம் தேதி வரை சுயகணக்​கெடுப்பு (Selfe numeration) செய்​வதற்​கான முன்​ சோதனை யும் நடை​பெறவுள்​ளது. முன் சோதனைக்​காக தமிழக அரசுடன் கலந்​தாலோ​சித்து 3 இடங்​கள் தேர்ந்​தெடுக்​கப்​பட்​டுள்​ளன.

அதன்​படி கிராமப்​புற வகை​பாட்​டில் கிருஷ்ணகிரி மாவட்​டம் அஞ்​செட்டி தாலு​கா, திருவள்​ளூர் மாவட்​டம் ஆர்​.கேபேட்டை தாலு​கா​வின் ஒரு பகு​தி​யும், நகர்ப்​புற வகை​பாட்​டில் காஞ்​சிபுரம் மாவட்​டம் மாங்​காடு நகராட்​சி​யும் தேர்​வாகி​யுள்​ளது. தமிழ்​நாடு மக்​கள்தொகை கணக்​கெடுப்பு இயக்​குநரகம், இந்த முன் சோதனை பணி சுமூக​மாக நடை​பெறு​வதற்​கு, தொழில்​முறை வழி​காட்​டு​தல், பயிற்சி மற்​றும் மேற்​பார்வை உள்​ளிட்​ட​வற்றை தமிழக அரசுடன் ஒருங்​கிணைந்து செயல்​படுத்​தும்.

மாநில அரசின் கல்​வி, வரு​வாய், சுகா​தா​ரம் மற்​றும் உள்​ளாட்சி அமைப்​பு​கள் போன்ற பல்​வேறு துறை​களி​லுள்ள அலு​வலர்​கள் களப்​பணிக்​காக கணக்​கெடுப்​பாளர்​களாக​வும் மேற்​பார்​வை​யாளர்​களாக​வும் செயல்​படு​வார்​கள். அவர்களுக்கு பயிற்சி அளிக்​கப்​படும். தேர்ந்​தெடுக்​கப்​பட்ட மாதிரிப் பகு​தி​களில் உள்ள பொது​மக்​கள், முன்​ சோதனையின்​போது மக்​கள் தொகை கணக்​கெடுப்பு களப்​பணி​யாளர்​களுக்கு முழு ஒத்​துழைப்பை வழங்க வேண்​டும். இவ்​வாறு தமிழக அரசு தெரிவித்​துள்​ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x