Published : 30 Oct 2025 04:14 AM
Last Updated : 30 Oct 2025 04:14 AM

நகராட்சி நிர்வாக துறையில் பணி நியமனத்தில் முறைகேடு: 150 பேரிடம் லட்சக்கணக்கில் லஞ்சம்

பிரதிநிதித்துவப் படம்

சென்னை: நக​ராட்சி நிர்​வாக துறை​யில் அரசு பணி வழங்​கிய​தில் முறைகேடு​கள் நடந்​திருப்​ப​தாக​வும், அது தொடர்​பாக விசா​ரணையை தொடங்​கு​மாறு தமிழக டிஜிபிக்கு அமலாக்​கத்​துறை கடிதம் அனுப்பி உள்​ளது.

இதுதொடர்​பாக அமலாக்​கத்​துறை எழுதிய கடிதத்​தில் கூறி​யிருப்​ப​தாவது: சென்​னை​யில் ஒரு தனியார் நிறு​வனத்​தின் வங்கி மோசடி வழக்கு தொடர்​பாக சிபிஐ பதிவு செய்த எஃப்​ஐஆர் அடிப்படையில் அமலாக்​கத் துறை வழக்​குப்​ ப​திவு செய்து விசா​ரணை நடத்​தி​யது. அதன்​படி, கடந்த ஏப்​ரல் மாதம் அந்​நிறுவனம் தொடர்​புடைய சென்​னை, திருச்சி, கோவை உள்​ளிட்ட பல்​வேறு இடங்​களில் சோதனை​கள் நடத்​தப்​பட்​டன. இதில் பல்​வேறு ஆவணங்​கள், டிஜிட்​டல் சாதனங்​கள், ஆதா​ரங்கள் கைப்பற்​றப்பட்​டன.

இந்த சோதனை​யில் வங்கி மோசடி தொடர்​பான ஆவணங்​களோடு வேறு சில முறை​கேடு​கள் தொடர்​பான ஆவணங்​களும் சிக்​கின. அதில், ஒன்று தமிழக அரசின் நகராட்சி நிர்​வாகம் மற்றும் குடிநீர் வழங்​கல் துறை​யில் கடந்த 2024-2025 மற்​றும் 2025-2026-ல் 2,538 அரசு பணி நியமனத்​தில் நடை​பெற்ற ஊழல் மற்​றும் முறை​கேடு​கள் தொடர்​பான​தாகும்.

இந்த பணி​களுக்​கான நியமன கடிதங்​கள் தமிழக முதல்​வ​ரால் கடந்த ஆக.6-ம் தேதி வழங்​கப்​பட்​டது. அதாவது 2,538 பேரில் 150 பேர் பணி​யின் தன்​மையை பொறுத்து தலா ரூ.25 முதல் ரூ.35 லட்​சம் லஞ்​சம் கொடுத்து அரசு வேலை பெற்​றுள்​ளது தெரிய​வந்​துள்​ளது. இதில், அதி​காரமிக்க அரசியல்​வா​தி​களும், அவர்​களுக்கு நெருக்​க​மான நிறு​வனங்​களும் ஈடு​பட்​டுள்​ளன.

நகராட்சி நிர்​வாகத் துறை​யால் அண்ணா பல்​கலைக்​கழகத்தில் நடத்​தப்​பட்ட இந்த ஆள் தேர்வின் மூலம் லஞ்​சம் கைமாறப்​பட்​டுள்​ளது. இதில், தொடர்​புடைய​வ​ராக சந்​தேகிக்​கப்​படு​பவர்​களின் பெயர்​கள் அடங்​கிய ஆவணங்​கள், இதற்கு மூளை​யாக செயல்​பட்​ட​வர்​களின் விவரங்​கள், புகைப்​படங்​கள், பணப்​பரிவர்த்​தனை​கள் போன்ற அனைத்து ஆதா​ரங்​களை​யும் 232 பக்க கடிதத்​துடன் இதில் இணைத்​துள்​ளோம்.

லஞ்​ச​மாக பெறப்​பட்ட பணம் ஹவாலா நெட்​வொர்க்​கு​களை பயன்​படுத்தி மாற்​றப்​பட்​டுள்​ளது. இதன்​மூலம் ஆயிரக்​கணக்​கான தேர்​வர்​கள் ஏமாற்​றப்​பட்​டு, வேலை​வாய்ப்பை இழந்​துள்​ளனர். ஒரு சில தனி​நபர்​களுக்கு எதி​ராக வேறு ஒரு வழக்​கில் விசா​ரணை மேற்​கொண்​ட​ போது, தற்​செய​லாக இந்த ஆதா​ரங்​கள் சிக்கி உள்​ளன. எனவே, இந்த முறை​கேட்​டில் ஈடு​பட்​டுள்ள மேலும் பலரை கண்​டறிய விரி​வான விசா​ரணை தேவை. தமிழக டிஜிபி இந்த முறை​கேடு தொடர்​பாக விசா​ரணையை விரை​வில் மேற்​கொள்ள வேண்​டும்​. இவ்​வாறு அந்தக் கடிதத்தில் கூறப்​பட்​டுள்​ளது.

தமிழகத்​தின் கடந்த ஏப்​ரல் மாதம் நகராட்சி நிர்​வாகத் துறை அமைச்​சர் கே.என்​.நேரு​வின் சகோ​தரர் ரவிச்​சந்​திரன் தொடர்​புடைய பல்​வேறு இடங்​களில் அமலாக்​கத் துறை சோதனை நடத்​தி​யது குறிப்​பிடத்​தக்​கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x