Published : 30 Oct 2025 03:51 AM
Last Updated : 30 Oct 2025 03:51 AM

தமிழகத்தின் வளர்ச்சியை யாராலும் தடுக்க முடியாது: தென்காசி அரசு விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதி

தென்காசி: எவ்​வளவு தொல்லை கொடுத்​தா​லும் தமிழகத்​தின் வளர்ச்​சியை யாராலும் தடுக்க முடி​யாது என்று முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் கூறி​னார்.

தென்​காசி மாவட்​டத்​தில் ரூ.1,020 கோடி மதிப்​பில் முடிவுற்ற திட்​டப் பணி​கள் தொடக்க விழா, புதிய பணி​களுக்கு அடிக்​கல் நாட்டு விழா மற்​றும் நலத்​திட்ட உதவி​கள் வழங்​கும் விழா ஆய்க்​குடி​யில் நேற்று நடை​பெற்​றது.

2.44 லட்சம் பயனாளிகள்: இதில், 2,44,469 பயனாளி​களுக்கு ரூ.587.39 கோடி மதிப்​பிலான நலத்​திட்ட உதவி​களை முதல்​வர் மு.க.ஸ்​டாலின் வழங்கினார். ரூ.141.60 கோடி​யில் முடிவுற்ற 117 திட்​டப் பணி​களை தொடங்​கி​வைத்​து, ரூ.291.19 கோடி மதிப்​பில் 83 பணி​களுக்கு அடிக்​கல் நாட்​டி​னார். விழா​வில், முதல்​வர் பேசி​ய​தாவது:

தென்​காசி காசி விஸ்​வ​நாதர் கோயில் குட​முழுக்கை 19 ஆண்​டு​களுக்​குப் பிறகு கடந்த ஏப்​ரல் மாதம் திரா​விட மாடல் அரசு நடத்​தி​யது. தமிழ
கத்தை அனைத்து துறை​களி​லும் முன்​னேற்றி வரு​கிறோம். மக்​களைப் பாது​காப்​பது​தான் இந்த ஆட்​சி​யின் நோக்​கம்.

எதிர்க்​கட்​சித் தலை​வர் பழனி​சாமி விரக்​தி​யின் உச்​சிக்கே சென்று பேசுகிறார். நெல்லை கொள்​முதல் செய்​ய​வில்லை என்று அவதூறு பரப்​பு
​கிறார். முந்​தைய அதி​முக ஆட்​சி​யை​விட கூடு​தலாக நெல் கொள்​முதல் செய்​யப்​பட்டு வரு​கிறது.

கடந்த 4 ஆண்​டு​களில் 1.70 கோடி டன் நெல் கொள்​முதல் செய்​யப்​பட்​டுள்​ளது. ஆண்​டுக்கு சராசரி​யாக 42.61 லட்​சம் டன் நெல் கொள்​முதல் செய்​யப்​பட்​டுள்​ளது. ஆனால், முந்​தைய ஆட்​சி​யில் சராசரி​யாக ஆண்​டுக்கு 22.70 லட்​சம் டன் மட்​டுமே கொள்​முதல் செய்​யப்​பட்​டது.

பழனி​சாமி​யிடம் பொய்​யை​யும், துரோகத்​தை​யும் தவிர வேறு எதையும் எதிர்​பார்க்க முடி​யாது. அவரது வரலாறே அது​தான். அதி​முக ஆட்​சி
​யில் அக்​டோபர் முதல் தேதி​யில்​தான் நெல் கொள்​முதல் செய்​யப்​பட்​டுள்​ளது. தற்​போது செப்​டம்​பர் முதல் நாளே நெல் கொள்​முதல் செய்​யப்​படு​கிறது.

மத்திய அரசுக்கு கோரிக்கை: கொள்​முதல் செய்​யப்​பட்ட நெல் பாது​காப்​பாக வைக்​கப்​பட்​டுள்​ளது. நெல்​லின் ஈரப்​ப​தத்தை 17 சதவீதத்​தில் இருந்து 22 சதவீத​மாக அதி​கரிக்​கு​மாறு மத்​திய அரசுக்கு கோரிக்கை வைத்​தேன். அதன்​பேரில், மத்​திய அரசு அதி​காரி​கள் நெல்​லைப் பார்​வை​யிட்டு வரு​கின்​றனர். நெல் வரத்து அதி​க​மாக இருப்​ப​தால் ஞாயிற்​றுக்​கிழமை​யும் கொள்​முதல் நிலை​யங்​கள் செயல்​படு​கின்​றன.

கடந்த 4 ஆண்​டு​களில் 3 முறை இயற்கைப் பேரிடரை சந்​தித்​தோம். ஆனால், நிவாரண உதவி​களை மேற்​கொள்ள தமிழகம் கேட்ட ரூ.37 ஆயிரம்
கோடியை பாஜக அரசு கொடுக்க​வில்​லை. நிதியை கொடுத்​தால் தமிழகம் வளர்ந்​து​விடும், அது நடக்கக் கூடாது என மத்​திய அரசு கருதுகிறது. எவ்​வளவு தொல்லை கொடுத்​தா​லும் தமிழகத்​தின் வளர்ச்​சியை யாராலும் தடுக்க முடி​யாது.

முயற்சிகளை முறியடிப்போம்: பிஹாரில் பாஜகவின் தோல்வி உறு​தி​யான​தால், வாக்​காளர்​களை நீக்​கத் துணிந்​தனர். அதையே தமிழகத்​தி​லும் மேற்​கொள்ள முயற்சிக்கின்றனர். தொடக்​கம் முதலே இந்த சதியை எதிர்த்து வரு​கிறோம். கேரளா​வும் நம்​மோடு இணைந்​துள்​ளது. வாக்குரிமை
பறிப்​பு, வாக்கு திருட்டு போன்ற பாஜக​வின் முயற்​சிகளை முறியடிப்​போம். இவ்​வாறு முதல்​வர் பேசி​னார்.

முன்னதாக, தென்காசி மாவட்ட ஆட்சியர் ஏ.கே.கமல் கிஷோர் வரவேற்​றார். விழா​வில், அமைச்​சர்​கள் கே.என்​.நேரு, ஐ.பெரிய​சாமி, சாத்​தூர் ராமச்​சந்​திரன், தங்​கம் தென்​னரசு, கீதா ஜீவன், ராஜகண்​ணப்​பன், மனோ தங்​க​ராஜ், எம்​.பி.க்​கள் கனி​மொழி, ராபர்ட் ப்ரூஸ், ராணி கு​மார், சட்​டப்​பேரவை முன்​னாள் தலை​வர் ஆவுடையப்​பன், ஊரக வளர்ச்சித் துறை செயலர் ககன்​தீப்​சிங் பேடி, திமுக மாவட்​டப் பொறுப்​பாளர் ஜெய​பாலன் உள்​ளிட்​டோர் கலந்​து​கொண்​டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x