Published : 29 Oct 2025 05:44 AM
Last Updated : 29 Oct 2025 05:44 AM

நாடு முழுவதும் மருத்துவ மாணவர்களின் மன நலனை அறிய ஆன்லைனில் சர்வே: மருத்துவ ஆணையம் நடவடிக்கை

சென்னை: ​நாடு​முழு​வதும் மருத்​து​வக் கல்​லூரி மாணவர்​களின் தற்​கொலை​யைத் தடுக்​க​வும், மன அழுத்​தத்​தைப் போக்​க​வும், மாணவர்களின் மன நலனைத் தெரிந்​து​கொள்​ள​வும் ஆன்​லைனில் தகவல் சேகரிப்பு சர்​வேயை தேசிய மருத்​துவ ஆணை​யம் மேற்​கொண்​டுள்​ளது.

நாடு​முழு​வதும் உள்ள மருத்​து​வக் கல்வி நிறு​வனங்​களில் ஆங்​காங்கே நடக்​கும் தற்​கொலை சம்​பவங்​களைத் தடுக்​க​வும், மாணவர்​களின் மன அழுத்​தத்​தைப் போக்​க​வும் உச்ச நீதி​மன்ற உத்​தர​வின் பேரில் தேசிய செயல்​திட்ட குழு அமைக்​கப்​பட்​டது. அந்த குழு கடந்த ஆக.8-ம் தேதி https;//ntf.education.gov.in என்ற இணை​யதளத்​தைத் தொடங்​கி​யுள்​ளது.

அந்த இணை​யதளத்​தில் மாணவர்​கள், பெற்​றோர், கல்லூரியைச் சேர்ந்​தவர்​கள், துறை சார்ந்​தவர்கள், பொது​மக்​கள், பாதிக்​கப்​பட்ட மாணவர்​களைச் சேர்ந்​தவர்கள் என அனைத்து தரப்பினரும் தங்​களது கருத்​துகளைத் தெரிவிக்​கலாம். கல்வி வளாகங்​களில் மன அழுத்​தத்​தைத் தவிர்ப்​பது தொடர்​பான பல்​வேறு கேள்வி​கள் அதில் இடம்​பெற்​றுள்​ளன.

அந்த சர்​வே​யில் பங்​கெடுப்​பவர்​களின் தனிப்​பட்ட விவரங்​கள் கேட்​கப்​ப​டாது. அதனால், அனைத்து மருத்​து​வக் கல்வி நிறு​வனங்களும், மாணவர்​களும், பெற்​றோரும் கலந்​து​கொண்டு கருத்​துகளைத் தெரிவிக்க வேண்​டும் என்று மருத்​துவ ஆணை​யம் கூறியுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x