Published : 29 Oct 2025 06:39 AM
Last Updated : 29 Oct 2025 06:39 AM

பஹ்ரைனில் நடைபெற்ற ஆசிய இளையோர் கபடி போட்டியில் தங்கம் வென்ற கார்த்திகாவுக்கு பழனிசாமி வாழ்த்து

ஆசிய இளை​யோர் கபடி போட்​டி​யில் தங்கப்பதக்கம் வென்ற கார்த்திகாவை அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி நேற்று நேரில் அழைத்து வாழ்த்தினார்.

சென்னை: கபடி போட்​டி​யில் தங்​கம் வென்ற கண்​ணகி நகர் கார்த்​தி​காவை அழைத்து அதி​முக பொதுச்​செய​லா​ளர் பழனி​சாமி வாழ்த்து தெரி​வித்​தார். பஹ்ரைனில் நடை​பெற்ற ஆசிய இளை​யோர் போட்​டி​யில் இந்​திய மகளிர் கபடி அணி தங்​கம் வென்று அசத்​தி​யது. இதில் அணி​யின் துணை கேப்​ட​னாக இருந்து சிறப்​பாக செயல்​பட்ட சென்னை கண்​ணகி நகரைச்சேர்ந்த கார்த்​தி​கா​வுக்கு பாராட்​டு​கள் குவிந்து வரு​கின்​றன.

போட்டி முடிந்து சென்னை திரும்​பிய கார்த்​தி​காவை அழைத்து முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் ரூ.25 லட்​சம் ஊக்​கத்​தொகை வழங்கி வாழ்த்​தி​னார். அதைத் ​தொடர்ந்து தென்​சென்னை திமுக சார்​பில் அமைச்​சர் மா.சுப்​பிரமணி​யன் தலை​மை​யில் கார்த்​தி​கா​வுக்கு பாராட்டு விழா நடை​பெற்​றது.

இதையடுத்து சென்னை பசுமைவழிச் சாலை​யில் உள்ள செவ்​வந்தி இல்​லத்​தில் அதி​முக பொதுச்​செய​லா​ளர் பழனி​சாமி, கார்த்​தி​காவை நேற்று அழைத்து வாழ்த்து தெரி​வித்​தார். அப்​போது ரூ.1 லட்​சம் ஊக்​கத்​தொகைக்​கான காசோலையை கார்த்​தி​கா​விடம் பழனி​சாமி வழங்​கி​னார்.

பின்​னர் கார்த்​திகா செய்​தி​யாளர்​களிடம் கூறும்​போது, “ஆசிய இளை​யோர் கபடி போட்​டி​யில் தங்​கம் வென்​றதற்கு அதி​முக பொதுச்​செய​லா​ளர் பழனி​சாமி அழைத்து பேசி பாராட்டு தெரி​வித்​தார். இன்​னும் உலகள​வில் கண்​ணகி நகரை கொண்டு செல்ல வேண்​டும் என வாழ்த்​தி​னார்.

கண்​ணகி நகரில் இருந்து சர்​வ​தேச அளவில் விளை​யாட செல்​வது மிக​வும் சந்​தோஷ​மாக இருக்​கிறது. இதையடுத்து சீனியர் ஆசிய விளை​யாட்டு போட்​டிகள், உலக கோப்பை போட்​டிகளில் பங்​கேற்​க​வும் ஆர்​வ​மாக உள்ளேன். எனக்கு அரசு வழங்​கிய ஊக்​கத்​ தொகையை கூடு​தலாக கொடுத்​திருந்​தால் நன்​றாக இருந்​திருக்​கும்” என்று தெரி​வித்​தார்.

இதுகுறித்து பழனி​சாமி வெளியிட்ட சமூக வலை​தளப் பதி​வில், “எளிய பின்​னணி​யில் இருந்து தன்​னுடைய திறமை​யாலும், விடா​ முயற்​சி​யாலும் கபடி விளையாட்​டில் ஜொலித்து வரும் கார்த்​தி​காவை அழைத்து வாழ்த்​தினேன். அவர் மென்​மேலும் பல வெற்றிகளைக் குவித்து தமிழகத்​துக்​கும், இந்​திய நாட்​டுக்​கும் பெரு​மை​களை அள்​ளிக் குவிக்க வாழ்த்​துக்​கள்” என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்​நிகழ்​வில் கபடி பயிற்​சி​யாளர் கே.​ராஜ், கபடி வீராங்​கனை ஆர்​.​காவ்​யா, சோழிங்​க நல்​லூர் மேற்கு பகுதி செய​லா​ளர்​ டி.சி.கருணா உள்​ளிட்​டோர்​ பங்​கேற்​றனர்​. மாநகராட்சி சார்பில் ரூ.5 லட்சம் ​கார்த்​தி​கா​வின் வெற்​றியை பாராட்டி அவரை ஊக்​குவிக்​கும் வித​மாக சென்னை மாநக​ராட்சி சார்​பில் ரூ.5 லட்​சம் பரிசு வழங்​கப்​பட்​டது. அதற்​கான காசோலையை மாநக​ராட்சி ரிப்​பன் கட்​டிட வளாகத்​தில் கார்த்​தி​கா​விடம் மேயர் ஆர்​.பிரியா நேற்று வழங்​கி​னார். அப்​போது கார்த்​தி​கா​வுக்கு பொன்​னாடை போர்த்தி பா​ராட்​டி​னார்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x