Published : 29 Oct 2025 06:15 AM
Last Updated : 29 Oct 2025 06:15 AM

ஐபிஎஸ் அதிகாரியாக பதவி வகிக்க தகுதியற்றவர் வருண்குமார்: மனுவை தள்ளுபடி செய்யக்கோரி சீமான் பதில் மனு

சென்னை: நி​யாய​மான விமர்​சனங்​களை தாங்​கிக்​கொள்ள முடியவில்லை என்​றால் வருண்​கு​மார், ஐபிஎஸ் அதி​காரி​யாக இருக்க தகு​தி​ய​வற்​றவ27ர் என கடுமை​யாக விமர்​சித்து சீமான் தரப்​பில் உயர் நீதி​மன்​றத்​தில் பதில்​மனு தாக்​கல் செய்​யப்​பட்​டுள்​ளது. நாம் தமிழர் கட்​சி​யின் தலைமை ஒருங்​கிணைப்​பாள​ரான சீமானுக்​கும், ஐபிஎஸ் அதி​காரி​யான வருண்​கு​மாருக்​கும் இடையே கருத்து ரீதி​யாகமோதல்​கள் ஏற்​பட்​டன.

இது தொடர்​பாக வருண்​கு​மார் தொடர்ந்த வழக்கை விசா​ரித்த உயர் நீதி​மன்​றம், அவருக்கு எதி​ராக அவதூறு கருத்​துகளை தெரிவிக்​கக்​கூ​டாது என சீமானுக்கு இடைக்​காலத் தடை விதித்து உத்​தர​விட்​டுள்​ளது. இந்​நிலை​யில், சீமானுக்கு எதி​ராக ரூ.2.10 கோடி மான நஷ்டஈடு கோரி வருண்​கு​மார் தொடர்ந்த வழக்​கு, உயர் நீதி​மன்​றத்​தில் நீதிபதி பி.தன​பால் முன்​பாக விசா​ரணைக்கு வந்​தது. அப்​போது சீமான் தரப்​பில் வழக்​கறிஞர் எஸ்​.சங்​கர் ஆஜராகி பதில் மனுவை தாக்​கல் செய்​தார்.

அதில் கூறி​யிருப்​ப​தாவது: ஐபிஎஸ் அதிகாரி​யான வருண்கு​மார் எனக்கு எதி​ராக தெரி​வித்​துள்ள புகார்​கள் உண்​மைக்கு புறம்​பானவை. அவரது வழக்கு விசா​ரணைக்கு உகந்​தது அல்ல. டெல்​லி​யில் ஐபிஎஸ் அதி​காரி​யாக பயிற்​சி​யி்ல் இருந்​த​போது பிரியதர்​ஷினி என்​பவருக்​கும் அவருக்​கும் பழக்​கம் ஏற்​பட்​டது.

ஆனால் அவரை திரு​மணம் செய்து கொள்ள அளவுக்கு அதி​க​மாக வரதட்​சணை கேட்​ட​தாக எழுந்த புகாரின்​பேரில் வருண்​கு​மாருக்கு எதி​ராக வரதட்​சணை தடுப்பு சட்​டத்​தின்​கீழ் வழக்​குப்​ப​திவு செய்​யப்​பட்டு அவர் நீதி​மன்ற காவலில் சிறை​யில் அடைக்​கப்​பட்​டார். அதன்​பிறகு அவர் ராம​நாத​புரம் எஸ்​பி​யாக பணி​யாற்​றிய​போது ட்விட்​டரில் தனது சொந்த கருத்​துகளை பதி​விட்​டதற்​காக பணி​யிட மாற்​றம் செய்​யப்​பட்​டார். அவரின் நடத்​தைகளுக்கு இந்த சம்​பவங்​களே சாட்​சி.

வருண்​கு​மார் குறித்​தும், அவரது குடும்​பம் குறித்​தும் தனிப்​பட்ட முறை​யில் எந்த கருத்​தை​யும் தெரிவிக்​க​வில்​லை. எனது கட்சி நிர்​வாகி​யான சாட்டை துரை​முரு​கன் மீது பழி​வாங்​கும் நோக்​கில் வழக்​கு​களை பதிவு செய்​தார் என்​ப​தற்​காக, ஒரு காவல்​துறை அதி​காரி​யாக அவரது செயல்​பாடு​கள் குறித்து மட்​டுமே விமர்​சிக்​கப்​பட்​டது. தனிப்​பட்ட எனது அரசி​யல் ஆதா​யத்​துக்​காக யாரை​யும் விமர்​சித்​தது கிடை​யாது.

ஆனால் ஐபிஎஸ் அதி​காரி​யான வருண்​கு​மார் ஆளுங்​கட்​சிக்கு ஆதர​வாக செயல்​படு​வ​தாக நினைத்​துக்​கொண்டு என்​னை​யும், கட்சி நிர்​வாகிளை​யும் தொடர்ந்து அவதூறாக விமர்​சித்து வரு​கிறார். நியாய​மான இந்த விமர்​சனங்​களை அவரால் தாங்​கிக்​கொள்ள முடிய​வில்லை என்​றால் அவர் ஐபிஎஸ் அதி​காரி​யாக பதவி வகி்க்​கவே தகு​தி​ய​வற்​றவர். அவருக்கு உளவியல் ரீதி​யாக ஆலோ​சனை தேவைப்​படும் நேரம் இது. எனவே, எனக்கு எதி​ரான இந்த வழக்கை தள்​ளு​படி செய்ய வேண்​டும். இவ்​வாறு பதில் மனு​வில் கோரி​யுள்​ளார். அதையடுத்து விசா​ரணையை நவ.11-க்கு நீதிப​தி தள்ளி வைத்​துள்​ளார்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x