Published : 28 Oct 2025 05:38 AM
Last Updated : 28 Oct 2025 05:38 AM

சென்னையில் மழையால் பாதிக்கப்படும் மக்களுக்கு உடனடியாக உதவ 215 இடங்களில் வெள்ள நிவாரண மையங்கள்

சென்னை: சென்னை ​மாநகரில் மழை​யால் பாதிக்​கப்​படும் மக்​களுக்கு உடனடி​யாக உதவி செய்​வதற்​காக 215 இடங்​களில் வெள்ள நிவாரண மையங்​கள் இயங்கி வரு​வ​தாக அரசு தெரி​வித்​துள்​ளது.

இது தொடர்​பாக தமிழக அரசு நேற்று வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பு: வடகிழக்கு பரு​வ​மழை காரண​மாக தமிழ்​நாடு முழு​வ​தி​லும் பரவலாக மழை பெய்து வரு​கிறது. மழைநீர் சூழ்ந்து பாதிக்​கப்​படும் பகு​தி​களில் உள்ள மக்​களுக்கு தேவை​யான உதவி​களை அளிக்​கும் வகை​யில் வெள்ள நிவாரண முகாம்​கள் அமைக்​கப்​பட்​டுள்​ளன.

பெருநகர சென்னை மாநக​ராட்சி சார்​பில் 215 இடங்​களில் நிவாரண மையங்​கள் செயல்​பட்டு வரு​கின்​றன. இம்​மை​யங்​களில் உணவு, சுகா​தார வசதி, குடிநீர் வசதி​கள் செய்​யப்​பட்​டுள்​ளன. நிவாரண மையங்​களுக்கு உணவு வழங்க ஏது​வாக 106 மைய சமையல் கூடங்​கள் தயார் நிலை​யில் வைக்​கப்​பட்​டுள்​ளன.

புகாருக்கு `1913' அழைக்கலாம்: மழைநீர் தேங்​கும் இடங்​களில் மழைநீரை வெளி​யேற்​றும் வகை​யில் பல்​வேறு திறன் கொண்ட 2000-க்கு மேற்​பட்ட மோட்​டார் பம்​பு​கள் ஆங்​காங்கே தயார் நிலை​யில் உள்​ளன. 22 சுரங்​கப்​பாதைகளில் மழைநீர் தேங்​காமல் தொடர்ந்து பராமரிக்​கப்​பட்டு வரு​கிறது. பொது​மக்​கள் மழை வெள்​ளம் காரண​மாக ஏதேனும் பாதிப்பு ஏற்​பட்​டால், 150 இணைப்​பு​களு​டன் கூடிய ‘1913’ என்ற கட்​ட​ணமில்லா தொலைபேசி எண்​ணில் தொடர்​பு​கொள்​ளலாம்.

இந்த புகார்​கள் மீதும், சமூக ஊடகங்​களில் வரும் புகார் மீதும் உடனடி நடவடிக்​கைகள் எடுக்​கப்​பட்டு வரு​கின்​றன. இதற்​காக மாநக​ராட்சி அலு​வலர்​கள், பொறி​யாளர்​கள், பணி​யாளர்​கள், தூய்​மைப் பணி​யாளர்​கள் என 22 ஆயிரம் பேரும் சென்னை குடிநீர் வாரி​யத்​தின் 2,149 களப்​பணி​யாளர்​களும் தயார் நிலை​யில் உள்​ளனர். இவ்​வாறு அதில்​ கூறப்​பட்​டுள்​ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x