Published : 27 Oct 2025 06:36 PM
Last Updated : 27 Oct 2025 06:36 PM

ஆறுதல் கூறும் நிகழ்வு: விஜய்யை சந்திக்க மாமல்லபுரம் செல்லாத 3 குடும்பத்தினர்!

கரூர்: கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்​தவர்​களின் குடும்​பத்​தினர், பாதிக்​கப்​பட்​ட​வர்​களை, தவெக தலைவர் விஜய், மாமல்​லபுரம் ஓட்​டலில் திங்கள்கிழமை சந்​தித்து ஆறு​தல் கூறி​னார். இதற்​காக பாதிக்​கப்​பட்ட குடும்​பத்​தினரை பேருந்​துகளில் தவெக​வினர் அழைத்​துச் சென்​றனர்.

இதில், கரூர் மாவட்​டம் அரவக்​குறிச்​சியை அடுத்த தொக்குப்​பட்டி புதூரைச் சேர்ந்த கல்​லூரி மாண​வி​யான அஜி​தா (21)​ குடும்​பத்​தினர் சென்னை செல்​ல​வில்​லை. இதுகுறித்து அஜி​தா​வின் சகோ​தரர் அமர்​நாத்​திடம் கேட்​ட​போது, ‘விருப்​பமில்​லாத​தால் செல்​ல​வில்​லை’ என்றார்.

இதே​போல, ஏமூர் புதூரைச்சேர்ந்த பிருத்​திக் ​(10) குடும்​பத்​தினரும் செல்​ல​வில்​லை. இவரது தந்தை பன்​னீர்​செல்​வம்​தான், சிபிஐ விசாரணை கோரி உச்ச நீதி​மன்​றத்​தில் வழக்கு தொடர்ந்​திருந்​தார். ஆனால், அவர் தங்​கள் குடும்​பத்தை விட்டு 8 ஆண்​டு​களுக்கு முன்பே பிரிந்து சென்​று​விட்​ட​தாக​வும், பணத்​துக்​காக வழக்கு தொடர்ந்​துள்​ள​தாக​வும் சிறு​வனின் தாய் சர்​மிளா குற்​றம்​சாட்டி இருந்​தார் என்​பது குறிப்​பிடத்​தக்​கது.

விஜய்யை சந்​திக்​கச் செல்​லாதது குறித்து சர்​மிளா​வின் சகோ​தரர் சந்​துரு​விடம் கேட்​ட​போது, ‘சகோ​தரி சர்​மிளா உள்​ளிட்ட குடும்பத்தினருக்கு உடல் நிலை சரி​யில்​லாத​தால் செல்​ல​வில்​லை’ என்​றார்​.

மேலும், கரூர் பசுபதிபாளையத்தை சேர்ந்த வடிவழகன் என்ற வடிவேல் குடும்பத்தினரும் மாமல்லபுரம் செல்லவில்லை. இதுகுறித்து அவரது குடும்பத்தினரிடம் கேட்டபோது, ‘‘வடிவேலுக்கு 30-ம் நாள் படைத்ததால் செல்லவில்லை’’ என்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x