Published : 27 Oct 2025 06:30 AM
Last Updated : 27 Oct 2025 06:30 AM

கனமழை காரணமாக நீர்வரத்து அதிகரிப்பு: காஞ்சி, செங்கை மாவட்டங்களில் 123 ஏரிகள் நிரம்பின

கோப்புப்படம்

மதுராந்தகம்: ​காஞ்​சிபுரம் மற்​றும் செங்​கல்​பட்டு மாவட்​டங்​களில் பல்​வேறு பகு​தி​களில் கடந்த சில நாட்​களாக கனமழை பெய்து வரு​வ​தால், 123 ஏரி​கள் முழு​மை​யாக நிரம்பி உள்​ளன. வங்க கடலில் உரு​வான குறைந்த காற்​றழுத்த தாழ்வு நிலை​யால், செங்​கல்​பட்டு மாவட்​டத்​தின் பல்​வேறு பகு​தி​களில், கடந்த சில நாட்​களாக கனமழை பெய்​தது.

மேலும், கனமழை காரண​மாக ஏரி, குளங்​கள் உள்​ளிட்ட நீர் நிலைகளுக்​கும் நீர்​வரத்து அதி​கரித்​துள்​ளது. இதில், செங்​கல்​பட்டு அடுத்த பாலாற்​றில் நீரோட்​டம் ஏற்​பட்​டுள்​ள​தால், வல்​லிபுரம் மற்​றும் வாயலூர் பகு​தி​களில் உள்ள தடுப்​பணை​கள் நிரம்பி உபரிநீர் தொடர்ந்து வெளி​யேறி வரு​கிறது.

மேலும், மாவட்​டத்​தில் நீர்​வளத் துறை பராமரிப்​பில் உள்ள 528 ஏரி​களில், 51 ஏரி​கள் 100 சதவீத​மும், 79 ஏரி​கள் 75 சதவீத​மும், 153ஏரி​கள் 50 சதவீத​மும், 85 ஏரி​கள் 25 சதவீதத்​துக்கும் மேல் நிரம்​பி​யுள்​ளன. இதே​போல், காஞ்​சிபுரம் மாவட்​டத்​தில் உள்ள 381 ஏரி​களில் 72 ஏரி​கள் முழு​மை​யாக நிரம்​பி​யுள்​ளன.

மேலும், 56 ஏரி​கள் 75 சதவீத​மும், 136 ஏரி​கள் 50 சதவீதத்​துக்கும் மேல் நிரம்​பி​யுள்​ளன. இதுத​விர, முக்​கிய ஏரி​களான தாமல், உத்​திரமேரூர், மருத்​து​வம்​பாடி, தைப்​பாக்​கம் உள்​ளிட்ட ஏரி​கள் முழு கொள்ளளவை எட்​டி​யுள்​ளது. மேலும், கனமழை தொடர்ந்து பெய்​தால் சில ஏரி​கள் விரை​வாக நிரம்​பும் நிலை உள்​ளது. முழு​மை​யாக நிரம்​பி​யுள்ள ஏரி​களின் நிலை குறித்து தொடர்ந்து கண்​காணித்து வரு​வ​தாக நீர்​வளத்​துறை தெரி​வித்​துள்​ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x