Published : 27 Oct 2025 06:05 AM
Last Updated : 27 Oct 2025 06:05 AM

விஜய்யுடன் இன்று மாமல்லபுரத்தில் சந்திப்பு: உயிரிழந்தோர் குடும்பத்தினரை பேருந்தில் அழைத்து சென்ற தவெகவினர்

தவெக பிரச்சாரக் கூட்டத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினர் மாமல்லபுரத்தில் இன்று தவெக தலைவர் விஜய்யை சந்திக்கச் செல்வதற்காக கரூர் வெண்ணெய்மலையில் இருந்து தனியார் ஆம்னி பேருந்துகள் மூலம் நேற்று புறப்பட்டனர். | படம்: க.ராதாகிருஷ்ணன் |

கரூர்: கரூரில் தவெக பிரச்​சா​ரக் கூட்ட நெரிசலில் சிக்கி உயி​ரிழந்​தவர்​களின் குடும்​பத்​தினரை மாமல்​லபுரத்​தில் இன்று (அக்​.27) கட்​சித் தலை​வர் விஜய் சந்​தித்து ஆறு​தல் கூறுகிறார். இதையடுத்​து, உயி​ரிழந்​தவர்​களின் குடும்​பத்​தினரை கரூரில் இருந்து சென்​னைக்கு ஆம்னி பேருந்​தில் தவெக​வினர் நேற்று அழைத்​துச் சென்​றனர்.

கரூர் வேலு​சாமிபுரத்​தில் செப். 27-ம் தேதி நடை​பெற்ற தவெக பிரச்​சார கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயி​ரிழந்​தனர். பாதிக்​கப்​பட்ட குடும்​பத்​தினரை கடந்த 3, 4-ம் தேதி​களில் கட்சி நிர்​வாகி​கள் சந்​தித்து ஆறு​தல் கூறினர். இதற்​கிடை​யில், உயி​ரிழந்​தோர் குடும்​பத்​தினரின் வங்​கிக் கணக்​கு​களில் தவெக சார்​பில் தலா ரூ.20 லட்​சம் இழப்​பீட்​டுத் தொகை கடந்த 18-ம் தேதி வரவு வைக்​கப்​பட்​டது.

இதற்​கிடை​யில், கரூருக்கு விஜய் வரு​வ​தில் சிக்​கல் நீடித்​த​தால், உயி​ரிழந்த 41 பேரின் குடும்​பத்​தினரை மாமல்​லபுரத்​துக்கு வரவழைத்து சந்​திக்க விஜய் முடிவு செய்​தார். இதற்​காக, பாதிக்​கப்​பட்​டோரை தவெக நிர்​வாகி​கள் சில நாட்​களுக்கு முன்பு தொலைபேசி​யிலும், நேரிலும் தொடர்பு கொண்டு விவரங்​களை கூறி, அவர்​களின் கருத்​துகளை கேட்​டறிந்​தனர்.

இதையடுத்​து, கூட்ட நெரிசலில் சிக்கி உயி​ரிழந்த 41 பேரின் 33 குடும்​பங்​களைச் சேர்ந்​தவர்​களை கரூரில் இருந்து சென்​னைக்கு அழைத்​துச் செல்ல ஏற்​பாடு நடை​பெற்று வந்​தது. கரூர் வெண்​ணெய்​மலை​யில் இருந்து உயி​ரிழந்​தவர்​களின் 30 குடும்​பங்​களைச் சேர்ந்த 150-க்​கும் மேற்​பட்​டோரை 5 ஆம்னி பேருந்​துகள் மூலம் சென்​னைக்கு தவெக​வினர் நேற்று அழைத்​துச் சென்​றனர்.

பாதிக்​கப்​பட்ட 3 குடும்​பங்​களைச் சேர்ந்​தவர்​கள் செல்​ல​வில்​லை. முன்​ன​தாக, கரூர் மற்​றும் வெளி மாவட்​டங்​களைச் சேர்ந்த உயி​ரிழந்​தவர்​களின் குடும்​பத்​தினர், அவர​வர் குடி​யிருக்​கும் பகு​தி​களில் இருந்து பேருந்​துகள் நின்ற வெண்​ணெய்​மலை பகு​திக்கு தவெக சார்​பில் ஏற்​பாடு செய்​யப்​பட்​டிருந்த கார்​கள், மினி வேன்​கள் மூலம் அழைத்து வரப்​பட்​டனர். சென்​னைக்கு புறப்​பட்ட 5 பேருந்​துகளு​டன், 2 ஆம்​புலன்​ஸ்​கள், ஓய்​வு​பெற்ற டிஎஸ்பி தலை​மை​யில் பாது​காப்​புப் படை​யினர் மற்​றும் தவெக நிர்​வாகி​களும் சென்​றனர்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x