Published : 27 Oct 2025 12:57 AM
Last Updated : 27 Oct 2025 12:57 AM
சென்னை: வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்தப் பணியில் பாஜக தொண்டர்களும் ஈடுபட வேண்டும் என அக்கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கேட்டுக் கொண்டுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பு: தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்தப் பணி அடுத்த வாரம் தொடங்கும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. எனவே, வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த பணியில் தீவிர கவனம் செலுத்த வேண்டும். ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் எந்த வாக்காளர் பெயரும் விடுபடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
திருத்தப் பணியில் ஈடுபடும் அரசு அலுவலர்களுடன் இணைந்து, வாக்காளர்கள் யார் யார் என்பதை அடையாளம் காட்ட உதவ வேண்டும். நமது ஆதரவு வாக்காளர்களைப் நீக்க சிலர் சதி செய்யக்கூடும். எனவே, பாஜக தொண்டர்கள், பூத் கமிட்டி உறுப்பினர்கள் கவனமாகவும் விழிப்புணர்வுடனும் செயல்பட வேண்டும். அப்பாவி கிராம மக்களின் வாக்குரிமை பறிக்கப்படாமல் தொண்டர்கள் உதவ வேண்டும். வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர்கள் நீக்கப்பட்டால் அதற்கான காரணத்தை கேட்க வேண்டும். அரசு அலுவலர்கள் வாக் காளர் பட்டியலை சரிபார்க்கும்போது பாஜகவினர் விழிப்புடன் செயல்பட வேண்டும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT