Published : 27 Oct 2025 12:38 AM
Last Updated : 27 Oct 2025 12:38 AM

சென்னையில் ரூ.23 கோடியில் புனரமைக்கப்பட்ட பாரம்பரிய நீதிமன்ற கட்டிடத்தை உச்ச நீதிமன்ற நீதிபதி திறந்தார்

சென்னை உயர் நீதிமன்றத்துக்கு கூடுதல் புனரமைக்கப்பட்ட கட்டிடம் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. இதில் மத்திய அமைச்சர் அர்ஜுன் ராம் மெக்வால், தமிழக அமைச்சர் ரகுபதி, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சூர்யகாந்த், ஆர்.மகாதேவன், சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா, நீதிபதி ஆர்.சுரேஷ்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர். படம்: எஸ்.சத்தியசீலன்

சென்னை: சென்னை உயர் ​நீ​தி​மன்ற வளாகத்​தில் ரூ.23 கோடி​யில் சீரமைக்​கப்​பட்ட பாரம்​பரிய நீதி​மன்ற கட்​டிடத்தை உச்​ச நீ​தி​மன்ற நீதிபதி சூர்​ய​காந்த் திறந்து வைத்​தார்.

சென்னை உயர் ​நீ​தி​மன்​றம் அரு​கில் உள்ள அரசு அம்​பேத்​கர் சட்​டக்​கல்​லூரி இயங்​கிய பாரம்​பரிய கட்​டிடத்​தை, தமிழக அரசு சீரமைத்​துள்​ளது. இதில், சென்னை உயர் ​நீ​தி​மன்ற வழக்​கு​களை விசா​ரிக்க ஏது​வாக மாற்​றப்​பட்​டு, நீதி​மன்ற அறை​கள் உரு​வாக்​கப்​பட்​டுள்​ளன. இந்த கட்​டிடம் திறப்பு விழா நேற்று நடை​பெற்​றது. இதில், மத்​திய சட்​டத் துறை இணை​யமைச்​சர் அர்​ஜூன் ராம் மெக்​வால் முன்​னிலை​யில் உச்​ச நீ​தி​மன்ற நீதிபதி சூர்​ய​காந்த் கட்​டிடத்தை திறந்து வைத்​தார்.

பின்​னர், அவர் பேசி​யதாவது: இந்​தி​யா​வின் பட்டய நீதி​மன்​றங்​களில் சென்னை உயர் ​நீ​தி​மன்​றம் ஒரு உச்​சபட்​ச​மான அமைப்​பாக நிற்​கிறது. 1862-ல் தொடங்​கப்​பட்ட நாள் முதல்,நாம் அனை​வரும் நீதிக்​காக ஒன்​றிணைந்து செயல்​படு​வதற்​கான ஒரு குறி​யீ​டாக​வும் இருந்து வரு​கிறது. இந்​தப் புதுப்​பிக்​கப்​பட்ட கட்​டிடம், பழைய மற்​றும் புதி​ய​வற்​றின் ஒருங்​கிணைப்​புக்​கும், மாற்​றத்​துக்​கும் ஒரு குறி​யீ​டாக அமை​யும். இவ்​வாறு அவர் பேசி​னார்.

மத்​திய சட்​டத்​துறை இணை​யமைச்​சர் அர்​ஜூன் ராம் மெக்​வால் பேசும்​போது, "இந்தகூடு​தல் பாரம்​பரிய நீதி​மன்​றக் கட்​டிடத்தை நாம் திறந்து வைக்​கும்போது, நீதி தாமதப்​படுத்​தப்​ப​டாது, மறுக்​கப்​ப​டாது, அது ஒவ்​வொரு குடிமக​னுக்​கும் சென்​றடை​யும் என்​பதை உறுதி செய்​வதற்​கான நமது நோக்​கத்தை இது மீண்​டும் உறு​திப்​படுத்​தட்​டும்" என்​றார்.

உச்ச நீதிமன்ற நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் பேசும் போது, "இதுஒரு வரலாற்று நிகழ்வு. இந்தகட்டிடத்தில் இயங்கும் நீதிமன்றங்களில் இருந்து தரமான தீர்ப்புகள் வரட்டும்" என்றார். உச்ச நீதிமன்ற நீதிபதி ஆர்.மகாதேவன் பேசும்போது, "சட்டக்கல்லூரியாக தோன்றி, உயர் நீதிமன்றத்தின் அங்கமாக மாறியிருக்கும் இந்த கட்டிடம், தலைசிறந்த வாதங்களையும், நீதிமன்ற தீர்ப்புகளையும் வழங்கட்டும்" என்றார்.

இதேபோல் சென்னை உயர் ​நீ​தி​மன்ற தலைமை நீதிபதி ஸ்ரீவஸ்​தவா பேசும்​போது,"இந்​தி​யா​வின் மிக பழமை​யான நீதி​மன்​றம் இதில் இயங்க உள்​ளது. அவற்​றி​லிருந்து வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்ப்​பு​கள் வரும்" என்​றார்.தமிழக சட்​டத் துறை அமைச்​சர் எஸ்​.ரகுபதி, பேசும்போது, "அனைத்து வழக்​காடிகளுக்​கும், விரை​வாக நீதி கிடைக்க வேண்​டும் என்​ப​தற்​காக நீதித்​துறைக்கு தேவை​யான அடிப்​படை மற்​றும் இதர உட்​கட்​டமைப்பு வசதி​களை வழங்க அரசு முன்​னுரிமை அளித்து வரு​கிறது" என்​றார்.

இந்​நிகழ்ச்​சி​யில், சென்னை உயர் ​நீ​தி​மன்ற நீதிபதிகள் ஆர்.சுரேஷ்குமார், எம்​.எஸ்​.ரமேஷ், மத்​திய அரசின் கூடு​தல் சொலிசிட்​டர் ஜெனரல் ஏ.ஆர்​.எல்​.சுந்​தரேசன், தமிழக அரசு தலை​மைவழக்​கறிஞர்​ பி.எஸ்​.​ராமன்​ உள்ளிட்​டோர்​ கலந்​துக்​ கொண்​டனர்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x