Published : 25 Oct 2025 05:57 AM
Last Updated : 25 Oct 2025 05:57 AM

“விவசாயிகளை கொச்சைப்படுத்துகிறார் துணை முதல்வர் உதயநிதி” - பி.ஆர்.பாண்டியன் கண்டனம்

தஞ்​சாவூர்: தஞ்​சாவூர் மாவட்​டம் ஒரத்​த​நாடு பகு​தி​களில் உள்ள நேரடி நெல் கொள்​முதல் நிலை​யங்​களை நேற்று பார்​வை​யிட்​டு, பாதிப்​பு​கள் குறித்து விவ​சா​யிகளிடம் கேட்​டறிந்த தமிழக காவிரி விவ​சா​யிகள் சங்க பொதுச் செய​லா​ளர் பி.ஆர்​.​பாண்​டியன், பின்னர் செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது: டெல்டா மாவட்​டங்​களில் குறுவை அறு​வடை தீவிரம் அடைந்​துள்​ளது.

நெல் கொள்​முதலை தீவிரப்​படுத்த மாவட்ட நிர்​வாகங்​கள் பல்​வேறு நடவடிக்​கைகளை எடுத்​தா​லும், ஒரத்​த​நாடு புதூர், பின்னையூர், கண்​ணத்​தங்​குடி உள்​ளிட்ட கிராமங்​களில் 2 லட்​சத்​துக்​கும் மேற்​பட்ட நெல் மூட்​டைகள் தேங்​கி​யுள்​ளன.

இதே​போல, டெல்​டா​வில் பல மாவட்​டங்​களில் நெல் மூட்​டைகள் தேங்​கி​யுள்​ளன. ஆனால், துணை முதல்​வர் உதயநிதி மற்​றும் அமைச்​சர்​கள் தஞ்​சாவூரில் ரயில் வேகன்​களில் நெல் மூட்​டைகள் ஏற்​றப்​படு​வதை மட்​டும் பார்த்​துவிட்​டு, நெல் கொள்​முதல் நிலையங்​களில் நெல் மூட்​டைகள் தேக்​கம் இல்லை என தவறான தகவலை கூறி, விவ​சா​யிகளை கொச்​சைப்​படுத்​துகிறார்​கள்.

உண்​மைக்கு புறம்​பான தகவல்​களைக் கூறு​வது கண்​டிக்​கத்​தக்​கது. இவ்​வாறு அவர் கூறி​னார். சங்​கத்​தின் மாநிலத் தலை​வர் திருப்பதி வாண்​டை​யார், மாவட்​டத் தலை​வர் ஊரணிபுரம் ரவிச்​சந்​திரன்உள்​ளிட்​டோர் உடனிருந்​தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x