Published : 25 Oct 2025 07:11 AM
Last Updated : 25 Oct 2025 07:11 AM

தமிழகத்தில் புதிதாக 300 சுற்றுலா மையங்கள்: அமைச்சர் ராஜேந்திரன் தகவல்

விழுப்புரம்: விழுப்​புரம் மாவட்​டத்தில் உள்ள செஞ்சிக்​கோட்டையை சுற்றுலாத் துறை அமைச்​சர் ராஜேந்​திரன் நேற்று ஆய்வு செய்தார். பின்​னர் அவர் செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது: தமிழகத்​தில் சுற்​றுலாத் துறைக்கு கொள்​கையை உரு​வாக்​கி, 300-க்​கும் மேற்​பட்ட புதிய சுற்​றுலா மையங்​களை உரு​வாக்​க​வும், அதன் மூலம் சர்​வ​தேச சுற்​றுலா மைய​மாக தமிழகத்தை உயர்த்​த​வும் நடவடிக்கை எடுக்​கப்​பட்​டுள்​ளது.

செஞ்​சிக்​கோட்​டைக்கு சுற்​றுலாப் பயணி​கள் அதி​கம் வரு​வ​தால், ​கோட்​டை​யின் அடி​வாரம் மற்​றும் முக்​கியப் பகு​தி​களில் கூடு​தலாக குடிநீர், மின் விளக்​கு, இருக்​கை, கழிப்​பறை உள்​ளிட்ட அடிப்​படை வசதி​களை செய்து கொடுக்​கப்​படும். இவ்​வாறு அவர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x