Published : 25 Oct 2025 06:38 AM
Last Updated : 25 Oct 2025 06:38 AM

அக்டோபர் 28, 29-ம் தேதிகளில் கோவில்பட்டி, தென்காசிக்கு முதல்வர் வருகை

தூத்துக்குடி / தென்காசி: தூத்​துக்​குடி மாவட்​டம் கோவில்​பட்டி இளை​யரசனேந்​தல் சாலை​யில் புதி​தாக திமுக அலு​வல​கம் கட்டப்பட்​டுள்​ளது. இதன் வளாகத்​தில் முன்​னாள் முதல்​வர் கருணாநி​தி​யின் வெண்கல முழு உரு​வச் சிலை நிறு​வப்​பட்​டுள்​ளது.

வரும் 28-ம் தேதி மாலை விமானம் மூல​மாக மதுரை வருகை தரும் முதல்​வர் மு.க.ஸ்​டா​லின், அங்​கிருந்து சாலை மார்க்​க​மாக கோவில்​பட்​டிக்கு வந்​து, மாலை 6 மணி​யள​வில் திமுக அலு​வல​கத்​தை​யும், கருணாநி​தி​யின் சிலை​யை​யும் திறந்து வைக்​கிறார்.

பின்​னர், தென்​காசி​யில் வரும் 29-ம் தேதி காலை நடை​பெறும் அரசு விழா​வில் பங்​கேற்​று, முடிவுற்ற திட்​டப் பணி​களை திறந்​து​வைப்​பதுடன், புதிய திட்​டப் பணி​களுக்கு அடிக்​கல் நாட்​டி, பயனாளி​களுக்கு நலத்​திட்ட உதவி​களை வழங்​கு​கிறார்.

விழா முடிந்த பின்​னர் சாலை மார்க்​க​மாக மதுரைக்​குச் செல்​கிறார். இந்த விழாவுக்​காக தென்​காசி இலத்​தூர் ரவுண்​டா​னா​வில் இருந்து ஆய்க்​குடி செல்​லும் சாலை​யில் உள்ள காலி​யிடத்​தில் பந்​தல், மேடை அமைக்​கும் பணி​கள் நடை​பெற்று வரு​கின்​றன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x