Published : 25 Oct 2025 06:38 AM
Last Updated : 25 Oct 2025 06:38 AM
தூத்துக்குடி / தென்காசி: தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி இளையரசனேந்தல் சாலையில் புதிதாக திமுக அலுவலகம் கட்டப்பட்டுள்ளது. இதன் வளாகத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் வெண்கல முழு உருவச் சிலை நிறுவப்பட்டுள்ளது.
வரும் 28-ம் தேதி மாலை விமானம் மூலமாக மதுரை வருகை தரும் முதல்வர் மு.க.ஸ்டாலின், அங்கிருந்து சாலை மார்க்கமாக கோவில்பட்டிக்கு வந்து, மாலை 6 மணியளவில் திமுக அலுவலகத்தையும், கருணாநிதியின் சிலையையும் திறந்து வைக்கிறார்.
பின்னர், தென்காசியில் வரும் 29-ம் தேதி காலை நடைபெறும் அரசு விழாவில் பங்கேற்று, முடிவுற்ற திட்டப் பணிகளை திறந்துவைப்பதுடன், புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்.
விழா முடிந்த பின்னர் சாலை மார்க்கமாக மதுரைக்குச் செல்கிறார். இந்த விழாவுக்காக தென்காசி இலத்தூர் ரவுண்டானாவில் இருந்து ஆய்க்குடி செல்லும் சாலையில் உள்ள காலியிடத்தில் பந்தல், மேடை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT