Last Updated : 25 Oct, 2025 06:11 AM

4  

Published : 25 Oct 2025 06:11 AM
Last Updated : 25 Oct 2025 06:11 AM

பழனிசாமியிடம் வயலில் முளைவிட்ட கதிரைத்தான் காட்டினேன்: தஞ்சாவூரைச் சேர்ந்த பெண் விவசாயி விளக்கம்

காட்டூர் கொள்முதல் நிலையத்துக்கு வந்த எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமியிடம், வயலிலேயே நெல்மணிகள் முளைவிட்ட நெற்கதிர்களை காட்டும் பூங்கொடி.

தஞ்​சாவூர்: ஆய்​வுக்கு வந்த எதிர்க்​கட்​சித் தலை​வர் பழனி​சாமி​யிடம், வயலில் சாய்ந்து முளை​விட்ட நெற்​க​திர்​களைத்​தான் காண்பித்​தேன் என்று தஞ்​சாவூரைச் சேர்ந்த பெண் விவ​சாயி விளக்​கம் அளித்​துள்​ளார். டெல்டா மாவட்​டங்​களில் மழை​யால் பாதிக்​கப்​பட்ட நெற்​ப​யிர்​களை​யும், நெல் கொள்​முதல் நிலை​யங்​களில் கொள்​முதல் செய்​யப்​ப​டா​மல் தேங்கி முளை​விட்​டுள்ள நெல்​மணி​களை​யும் பார்​வை​யிடு​வதற்​காக எதிர்க்​கட்​சித் தலை​வர் பழனி​சாமி கடந்த 22-ல் தஞ்​சாவூருக்கு வந்​தார்.

காட்​டூர் நெல் கொள்​முதல் நிலை​யத்​தில் அவர் ஆய்வு செய்​த​போது, வரவுக்​கோட்​டையைச் சேர்ந்த பூங்​கொடி என்ற பெண் விவசாயி, தனது வயலில் அழுகிய நெற்​க​திர்​களை​யும், அதில் முளைத்த நெல்​மணி​களை​யும் பழனி​சாமி​யிடம் காண்​பித்​து, தனது வேதனையைத் தெரி​வித்​தார்.

இதனிடையே நேற்று முன்​தினம் தஞ்​சாவூர் ரயில் நிலை​யத்​தில் நெல் மூட்​டைகளை வேகன்​களில் அனுப்​பும் பணி​யைப் பார்வையிட வந்த துணை முதல்​வர் உதயநிதி ஸ்டா​லின், நெல் கொள்​முதல் தொடர்​பாக எதிர்க்​கட்​சித் தலை​வர் பழனி​சாமி பொய்​யான தகவல்​களை கூறி​யுள்​ள​தாக​வும், அவரிடம் நெல்​மணி​கள் முளைத்​துள்ளதை காட்​டிய பெண் (பூங்​கொடி) குத்​தகை சாகுபடி செய்து வருபவர் என்​றும், அவர் இன்​னும் அறு​வடை பணி​யையே மேற்​கொள்​ளாத​போது, அவர் எப்​படி நெல் மூட்டைகளை கொள்​முதல் நிலை​யத்​துக்கு கொண்டு வந்​தார் என்​பது அவருக்​குத்​தான் வெளிச்​சம் என்​றும் தெரி​வித்​திருந்​தார்.

வயலில் நெற்கதிர்களை காட்டும் பூங்கொடி.

இதுகுறித்து வரவுக்​கோட்​டையைச் சேர்ந்த விவ​சாயி பூங்​கொடி ‘இந்து தமிழ் திசை’ செய்​தி​யாளரிடம் கூறிய​தாவது: நான் 5 ஏக்கரில் குத்​தகை சாகுபடி செய்து வரு​கிறேன். தற்​போது அறு​வடை செய்​யும் தரு​வா​யில் உள்ள குறுவை நெற்​க​திர்​கள், அண்மையில் பெய்த மழை​யில் நனைந்து வயலிலேயே சாய்ந்து முளை​விடத் தொடங்​கி​யுள்​ளன.

இந்​நிலை​யில், காட்​டூர் கொள்​முதல் நிலை​யத்​துக்கு பழனி​சாமி வரு​வ​தாகக் கூறிய​தால், விவ​சா​யிகள் அங்கு சென்​றோம். அப்​போது நான், எனது வயலில் மழை​யில் அழுகிய மற்​றும் நெல்​மணி​கள் முளை​விட்ட நெற்​ப​யிரை பழனி​சாமி​யிடம் காண்​பித்​து, பாதிப்பு குறித்து தெரி​வித்​தேன். நெல் கொள்​முதல் நிலை​யத்​துக்கு கொண்​டு​வந்த நெல்​மணி​கள் முளைத்​து​விட்​ட​தாக நான் கூறவில்​லை. பின்​னர், வேளாண்​மை, வரு​வாய்த் துறை அதி​காரி​கள் எனது வயலைப் பார்​வை​யிட்​டனர்.

அப்​போது வயலிலேயே முளைவிட்ட நெற்​க​திர்​களை படம் பிடித்தனர். நான் ரூ.1.5 லட்​சம் செலவு செய்து சாகுபடி செய்​தேன். தற்​போது அறு​வடை செய்​ய​முடி​யாத நிலை ஏற்​பட்​டுள்​ளது. அறு​வடையை முடித்​து, அதில் கிடைக்​கும் வரு​வாயைக் கொண்​டு, மழையில் ஒழுகும் கூரை வீட்டை சரி செய்ய வேண்​டும் என்று கரு​தி​யிருந்தேன். ஆனால், மழை​யில் நனைந்து நெல்​மணி​கள் முளைத்துள்​ள​தால், வேதனை​யாக உள்​ளது. இவ்​வாறு அவர் கூறி​னார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x