Published : 24 Oct 2025 06:13 AM
Last Updated : 24 Oct 2025 06:13 AM

ராமநாதபுரத்தில் மழையால் ஆயிரக்கணக்கான ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த நெல், மிளகாய் பயிர்கள் நீரில் மூழ்கின

ராமநாதபுரம்: க​னமழை காரண​மாக ராம​நாத​புரம் மாவட்​டத்​தில் ஆயிரக்​கணக்​கான ஏக்​கரில் பயி​ரிடப்​பட்​டிருந்த நெல், மிள​காய் பயிர்​கள் மழைநீரில் மூழ்​கி​யுள்​ள​தால் விவ​சா​யிகள் வேதனை அடைந்​துள்​ளனர்.

ராம​நாத​புரம் மாவட்​டத்​தில் பெரும்​பகுதி மானா​வாரி​யாக உள்​ள​தால், மழையை​யும், வைகை நீரை​யும் நம்பி ஆண்​டு ​தோறும் 3 லட்​சம் ஏக்​கருக்கு மேல் நெல்​லும், 45 ஆயிரம் ஏக்​கருக்கு மேல் மிள​கா​யும் பயி​ரிடப்​படு​கின்​றன. கடந்த 16-ம் தேதி முதல் மாவட்​டத்​தில் தொடர்ந்து மழை பெய்து வரு​கிறது.

கடந்த 19-ம் தேதி முதல் 2 நாட்​கள் கனமழை பெய்​தது. இதனால் வயல்​வெளி​களில் குளம்​போல தண்​ணீர் தேங்கி​உள்​ளது. அனைத்​துப் பகு​தி​களி​லும் மழைநீர் தேங்​கி​யுள்​ள​தால், தண்​ணீரை வெளி​யேற்ற முடி​யாமல் விவ​சா​யிகள் சிரமப்​படு​கின்​றனர்.

குறிப்​பாக, திருஉத்​தரகோச மங்கை அரு​கே​யுள்ள நல்​லாங்​குடி, களக்​குடி, பனைக்​குளம், எக்​ககுடி பகு​தி​களில் 500 ஏக்​கருக்​கும் மேல் நெற்​ப​யிர்​ நீரில் மூழ்​கியது. ராம​நாத​புரம் அரு​கே​யுள்ள சூரங்​கோட்​டை, ஆர்​.​ காவனூர், முது​னாள், தொரு​வளூர் உள்​ளிட்ட பகு​தி​களி​லும் நூற்​றுக்​கணக்​கான ஏக்​கர் நெற்​ப​யிர்​ நீரில் மூழ்​கி​யது.

அதே​போல, மண்​டபம் ஒன்​றி​யம் மானாங்​குடி ஊராட்​சிக்கு உட்​பட்ட மானாங்​குடி, கடுக்​காய்​வலசை, மேலமண்​குண்​டு, கீழமண்​குண்டு பகு​தி​களில் இது​வரை இல்​லாத அளவுக்கு ஒரே நாளில் மழை கொட்​டித் தீர்த்​தது. இதனால் 2 ஆயிரம் ஏக்​கரில் பயி​ரிட்​டிருந்த நெற்​பயிர்​ மழைநீரில் மூழ்​கியது.

முதுகுளத்​தூர் அரு​கே​யுள்ள தாழியரேந்​தல், மட்​டியரேந்​தல் உள்​ளிட்ட கிராமங்​களில் நெல் வயல்​களி​லும், மிள​காய் வயல்​களி​லும் மழைநீர் தேங்​கி​யுள்​ளது. விவ​சா​யிகள் தண்​ணீரை வெளி​யேற்ற முடி​யாமல் வேதனை​யில் உள்​ளனர். இந்த வயல்​களில் தண்​ணீர் வடிந்​ததும் மீண்​டும் நெல் அல்​லது மிள​காய் விதைக்க வேண்​டிய நிலை ஏற்​பட்​டுள்​ள​தாக விவ​சா​யிகள் தெரி​வித்​தனர்.

இதுகுறித்து மானாங்​குடி முன்​னாள் ஊராட்​சித் தலை​வர் பரமேஸ்​வரி கூறும்​போது, “எங்​கள் ஊராட்​சிப் பகு​தி​யில் 2 ஆயிரம் ஏக்​கரில் நெல் பயி​ரிட்​டுள்​ளோம். வயல்​களில் மழைநீர் தேங்​கி, நெற்பயிர்​ அனைத்​தும் மூழ்​கி​யது. இதனால், மீண்​டும் விதைக்க விதை நெல்​கூட இல்​லாத நிலை ஏற்​பட்​டுள்​ளது. எனவே, மாவட்ட நிர்​வாகம் பாதிக்​கப்​பட்ட நிலங்​களை கணக்​கெடுத்​து, விவ​சா​யிகளுக்கு உரிய இழப்​பீடு வழங்க வேண்​டும்” என்​றார்.

இழப்பீடு வழங்க வேண்டும்: சூரங்​கோட்டை விவ​சாயி ஸ்டா​லின் கூறும்​போது, “மழை விட்டு 2 நாட்​களாகி​யும் மழைநீர் வடியாமல் வயல்​வெளி​களில் தேங்கி நிற்​ப​தால், நெற்​ப​யிர் அழுகி வரு​கிறது. மழைநீர் வெளி​யேற முடி​யாமல் வடி​கால்​கள் ஆக்​கிரமிக்​கப்​பட்​டுள்​ளன. எனவே, ஆக்​கிரமிப்​பு​களை அகற்ற வேண்​டும். பாதிக்​கப்பட்ட விவ​சாயிகளுக்கு இழப்​பீடு வழங்க வேண்டும்" என்​றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x