Published : 23 Oct 2025 01:16 PM 
 Last Updated : 23 Oct 2025 01:16 PM
சென்னை: வங்கக்கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி வலுவிழந்தது. இந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி அடுத்த 24 மணி நேரத்தில் மேலும் வலுவிழக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வங்கக்கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி வலுவிழந்து குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறியுள்ளது. இது தமிழ்நாட்டின் வடக்கே நிலைகொண்டுள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி மேற்கு-வட மேற்கு திசையில் நகர்ந்து தெற்கு கர்நாடக பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்தில் மேலும் வலுவிழக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
முன்னதாக நேற்று வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டலத் தலைவர் பி.அமுதா வெளியிட்ட செய்திக்குறிப்பில், “தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, தமிழக கடலோரப் பகுதிகளுக்கு அப்பால் நிலவுகிறது. இது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக தீவிரமடைய வாய்ப்பு இல்லை. ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாகவே இன்று (அக்.23) வட தமிழகம், புதுச்சேரி, தெற்கு ஆந்திர கடலோரப் பகுதிகளை கடந்து செல்லக்கூடும்” எனத் தெரிவித்திருந்தார்.
காற்றழுத்த தாழ்வுப் பகுதி, ஏற்கனவே எதிர்பார்த்தபடி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடையாததால், நேற்று பல்வேறு மாவட்டங்களில் மழைப்பொழிவு இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
								
WRITE A COMMENT