Published : 23 Oct 2025 06:31 AM
Last Updated : 23 Oct 2025 06:31 AM

பல்வேறு நகரங்களில் இருந்து சென்னைக்கு இன்று 2,900 சிறப்பு பேருந்துகள்

சென்னை: தீபாவளி பண்​டிகைக்​காக சென்​னை​யில் வசிக்​கும் வெளியூர் மக்​கள் தங்​கள் சொந்த ஊர்​களுக்கு சென்​றனர். பண்டிகை முடிந்து அவர் மீண்​டும் சென்னை திரும்ப நேற்று முன்​தினம் முதல் தமிழக போக்​கு​வரத்து துறை சார்​பில் சிறப்பு பேருந்துகள் இயக்​கப்​படு​கின்​றன.

பல்​வேறு ஊர்​களில் இருந்து சென்​னைக்கு தின​மும் 2,092 பேருந்​துகள் இயக்​கப்​படும். அதனுடன் கூடு​தலாக நேற்று முன்​தினம் 2,048 பேருந்​துகளும், நேற்று 2,392 பேருந்​துகளும் இயக்​கப்​பட்​டன.

பல்​வேறு ஊர்​களில் இருந்து கோவை, திருச்​சி, மதுரை போன்ற பிற முக்​கிய நகரங்​களுக்கு நேற்று முன்​தினம் 2,245 பேருந்​துகளும், நேற்று 1,485 பேருந்​துகளும் இயக்​கப்​பட்​டன.

பெரும்​பாலான மக்​கள் கடந்த 2 நாட்​களி​லேயே சென்னை திரும்பி இருப்​பார்​கள் என்​ப​தால் இன்று கூடு​தலாக 813 பேருந்​துகள் மட்​டுமே இயக்​கப்​படு​கிறது. வழக்​க​மாக இயக்​கப்​படும் 2,092 பேருந்​துகளு​டன் கூடு​தலாக 813 பேருந்​துகள் என மொத்​தம் 2,905 பேருந்​துகள் இன்று இயக்​கப்​படு​கின்​றன. பிற முக்​கிய நகரங்​களுக்கு இன்று 870 பேருந்​துகள் இயக்​கப்​பட உள்​ளன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x