Published : 23 Oct 2025 05:39 AM
Last Updated : 23 Oct 2025 05:39 AM

5 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: வங்​கக்​கடலில் நில​வும் ஆழ்ந்த காற்​றழுத்த தாழ்​வுப் பகுதி இன்று வட தமிழகம், புதுச்​சேரி, தெற்கு ஆந்​திர கடலோரப் பகு​தி​களை கடந்து செல்​லக்​கூடும். இதன் காரண​மாக, சென்​னை, திரு​வள்​ளூர், செங்​கல்​பட்​டு, காஞ்​சிபுரம், ராணிப்​பேட்டை மாவட்​டங்​களில் இன்று கனமழை பெய்​யக்​கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரி​வித்​துள்​ளது.

இதுதொடர்​பாக வானிலை ஆய்வு மையத்​தின் தென் மண்​டலத் தலை​வர் பி.அ​முதா வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பு: தென்​மேற்கு வங்​கக்​கடல் பகுதி​களில் நில​விய ஆழ்ந்த காற்​றழுத்த தாழ்​வுப் பகு​தி, தமிழக கடலோரப் பகு​தி​களுக்கு அப்​பால் நில​வு​கிறது. இது காற்​ற ழுத்த தாழ்வு மண்​டல​மாக தீவிரமடைய வாய்ப்பு இல்​லை.

ஆழ்ந்த காற்​றழுத்த தாழ்​வுப் பகு​தி​யாகவே இன்று (அக்​.23) வடதமிழகம், புதுச்​சேரி, தெற்கு ஆந்​திர கடலோரப் பகு​தி​களை கடந்து செல்​லக்​கூடும். தென்​கிழக்கு அரபிக்​கடல் பகு​தி​களில் நில​விய ஆழ்ந்த காற்​றழுத்த தாழ்​வுப் பகுதி நேற்று காற்​றழுத்த தாழ்வு மண்​டல​மாக வலுப்​பெற்று அதே பகு​தி​களில் நில​வு​கிறது.

இது வடக்​கு, வடமேற்கு திசை​யில் இன்று நகர்ந்து செல்​லக்​கூடும். மேலும், தெற்கு அந்​த​மான் கடல் மற்​றும் அதை ஒட்​டிய பகு​தி​களில் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நில​வு​கிறது. இதனால், தமிழகத்​தில் ஒருசில இடங்​களில் இன்று முதல் 27-ம் தேதி வரை இடி, மின்​னலுடன் லேசானது முதல் மித​மான மழை பெய்​யக்​கூடும்.

இன்று சென்​னை, திரு​வள்​ளூர், செங்​கல்​பட்​டு, காஞ்​சி, ராணிப்​பேட்டை மாவட்​டங்களி​லும், நாளை (அக்​.24) கடலூர், விழுப்​புரம், செங்​கல்​பட்டிலும் புதுச்​சேரி​யிலும் 26, 27-ம் தேதி​களில் சென்​னை, திரு​வள்​ளூர், காஞ்​சி, செங்​கல்​பட்​டு, கடலூர், கள்​ளக்​குறிச்​சி, திரு​வண்​ணா​மலை, வேலூர், ராணிப்​பேட்​டை, விழுப்​புரம் மாவட்​டங்​கள், புதுச்​சேரி​யிலும் ஓரிரு இடங்​களில் கனமழை பெய்யக்கூடும்.

வட, தென் தமிழக கடலோரப் பகு​தி​கள், தெற்கு ஆந்​திர கடலோரப் பகு​தி​கள், புதுச்​சேரி​யில் இன்று மணிக்கு 45-55 கி.மீ. வேகத்​தி​லும், இடை​யிடையே 65 கி.மீ. வேகத்​தி​லும், மன்​னார் வளை​கு​டா, குமரிக்​கடல் பகு​தி​களில் 35-45 கி.மீ. வேகத்​தி​லும், இடை​யிடையே 55 கி.மீ. வேகத்​தி​லும் சூறாவளிக் காற்று வீசக்​கூடும். எனவே, இப்​பகு​தி​களுக்கு மீனவர்​கள் செல்ல வேண்​டாம்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x