Published : 22 Oct 2025 06:27 AM
Last Updated : 22 Oct 2025 06:27 AM

தீபாவளிக்கு சொந்த ஊர் சென்றவர்கள் திரும்ப வசதியாக இன்று சென்னைக்கு 4,484 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

சென்னை: தீ​பாவளி பண்​டிகைக்​காக சொந்த ஊர் சென்​றவர்​கள் சென்னை திரும்ப வசதியாக இன்று 4,484 சிறப்பு பேருந்​துகள் இயக்​கப்​படவுள்ளதாக போக்​கு​வரத்து துறை தெரி​வித்​துள்​ளது.

தீபாவளியை முன்​னிட்டு 3 நாட்​கள் தொடர் விடு​முறை​யால் சென்​னை​யில் வசிக்​கும் வெளி​மாவட்ட மக்​கள் சொந்த ஊர்​களுக்​குச் சென்​றனர். பேருந்​துகள், ரயில்​கள், விமானம், சொந்த வாக​னங்​கள் மூலம் 16 லட்​சத்​துக்​கும் அதி​க​மான மக்​கள் சொந்த ஊர் சென்​றனர்.

தமிழக அரசு போக்​கு​வரத்து துறை சார்​பில் கடந்த 16-ம் தேதி முதல் 19-ம் தேதி வரை 4 நாட்​களில் 15,429 பேருந்​துகள் இயக்​கப்​பட்டன. இவற்றில் 7.95 லட்​சம் பேர் பயணம் செய்​தனர்.

இதனிடையே, சொந்த ஊர் சென்ற மக்​கள் சென்னை திரும்ப வசதி​யாக நேற்று முதல் சிறப்பு பேருந்​துகள் இயக்​கப்​படு​கின்றன. நேற்று அரசு பொது விடு​முறை அறிவிக்​கப்​பட்​ட​தால் அரசு அலு​வலக பணி​யாளர்​கள், பள்​ளி, கல்​லூரி மாணவர்​கள் இன்​றைய தினம் சென்னை திரும்ப திட்​ட​மிட்​டுள்​ளனர். ஆதலால் நேற்று மாலை முதல் மீண்​டும் சென்னை நோக்கி தங்​கள் பயணத்தை தொடங்​கினர். இதன்​படி நேற்று வழக்​க​மாக இயக்​கப்​படும் 2,092 பேருந்​துகளு​டன் கூடு​தலாக 2,245 பேருந்​துகள் இயக்​கப்​பட்​டன.

மேலும் சில ஐடி நிறுவன ஊழியர்​களுக்கு நேற்​றும், இன்​றும் வீட்​டில் இருந்து பணிபுரிய சலுகை வழங்​கப்​பட்​டது. இதனால் ஐடி, தனி​யார் நிறுவன ஊழியர்​கள் மற்​றும் கூடு​தல் நாட்​கள் விடுப்பு எடுத்​தவர்​கள் இன்​றும், நாளை​யும் சென்னை திரும்​பு​வார்​கள் என எதிர்​பார்க்​கப்​படு​கிறது.

இந்​நிலை​யில் இன்​றும், நாளை​யும் சிறப்பு பேருந்​துகள் இயக்க திட்​ட​மிடப்​பட்​டுள்​ளது. இன்று வழக்​க​மாக இயக்​கப்​படும் பேருந்​துகளு​டன் கூடு​தலாக 2,392 பேருந்​துகள் இயக்​கப்பட உள்​ளன.

அதே​போல சென்​னையைத் தவிர மற்ற நகரங்​களுக்கு 1,485 பேருந்​துகள் இயக்க திட்​ட​மிடப்​பட்​டுள்​ளது. நாளை சென்​னைக்கு கூடு​தலாக 813 பேருந்​துகளும், மற்ற நகரங்​களுக்கு 870 பேருந்​துகளும் இயக்க திட்​ட​மிடப்​பட்​டுள்​ளது.

வெளியூர்​களில் இருந்து சென்னை வரும் பேருந்​துகள் நெரிசலில் சிக்​காமல் இருக்க, போக்​கு​வரத்து காவல் துறை​யும், போக்​கு​வரத்து கழகங்​களும் சேர்ந்து பல்​வேறு சிறப்பு வசதி​களை ஏற்​படுத்தி உள்​ளன.

குறிப்​பாக செங்​கல்​பட்​டு, சிங்​கப்​பெரு​மாள்​கோ​வில் பகு​தி​களில் அதிக அளவில் போலீ​ஸார் பாது​காப்பு பணி​யில் ஈடு​படுத்​தப்​பட்​டுள்​ளனர். மேலும் அதி​காலை​யில் கிளாம்​பாக்​கம் பேருந்து நிலை​யம் வரும் பயணி​களுக்​காக மாநகர் போக்​கு​வரத்து கழகம் சார்​பில் போதிய அளவுக்கு இணைப்பு பேருந்​துகள் இயக்​க​வும் திட்​ட​மிடப்​பட்​டுள்​ளது.

மேலும் தெற்கு ரயில்வே சார்​பில் இன்று திருநெல்​வேலி​யில் இருந்து சென்னை எழும்​பூருக்கு சிறப்பு ரயில் இயக்​கப்​படும் என அறிவிக்​கப்​பட்​டுள்​ளது. இன்று இரவு 11.55 மணிக்கு நெல்​லை​யில் இருந்து புறப்​படும் சிறப்பு ரயில் அந்த வழித்தடத்தில் உள்ள சாத்​தூர், மதுரை, திண்​டுக்​கல், திருச்​சி, அரியலூர், விழுப்​புரம், செங்​கல்​பட்டு வழி​யாக சென்னை எழும்​பூருக்கு நாளை காலை 11 மணிக்கு வந்​தடை​யும் என தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x