Published : 16 Oct 2025 05:51 AM
Last Updated : 16 Oct 2025 05:51 AM

விண்ணப்பம் கொடுத்த 15 நாட்களில் குடிநீர் இணைப்பு வாக்குறுதியை நிறைவேற்றாத திமுக அரசு: நயினார் நாகேந்திரன்

சென்னை: ​விண்​ணப்​பம் கொடுத்த 15 நாட்​களில் குடிநீர் இணைப்பு வழங்​கப்​படும் என்ற வாக்​குறு​தியை நிறைவேற்​றாமல் திமுக அரசு அலட்​சி​யம் காட்​டிய​தாக, பாஜக மாநில தலை​வர் நயி​னார் நாகேந்​திரன் தெரி​வித்​துள்​ளார்.

இதுகுறித்​து, அவர் வெளி​யிட்​டுள்ள அறிக்​கை: “தமிழகம் தலைநிமிர, தமிழனின் பயணம்” என்ற நமது வேள்​விப் போராட்​டத்​தின் ஒரு பகு​தி​யாக, அக்​.14-ம் தேதி செங்​கல்​பட்டு மாவட்​டத்​தின் தாம்​பரம் பகு​திக்​குச் சென்​றிருந்​தேன்.

தாம்​பரத்​துக்​குப் பல பெருமைகள் இருந்​தா​லும், திமுக ஆட்​சி​யில் தாம்​பரம் என்​றவுடன் நமது நினை​வுக்கு வரு​வது, கடந்த ஆண்​டில் தாம்​பரம் மாநகராட்சி வழங்​கிய கழி​வுநீர் கலந்த குடிநீரைக் குடித்து 3 அப்​பாவி பொது​மக்​கள் மாண்டு போன துயரம் தான்.

விண்​ணப்​பம் கொடுத்த 15 நாட்​களில் குடிநீர் கிடைக்க ஏற்​பாடு செய்​வோம் என பொது​மக்​களை ஏமாற்றி ஆட்​சிக்கு வந்த திமுக அரசு, கொடுத்த வாக்​குறு​தியை இன்​று​வரை நிறைவேற்​றாதது மட்​டுமன்​றி, மக்​களின் அடிப்​படைத் தேவை​யிலும் அலட்சியத்தைக்காட்டி அவர்​களின் உயிரைக் குடித்​துக் கொண்​டிருக்​கின்​றது.

மழை வந்​தால் வெள்​ளத்​தில் மிதப்​பதும், மழை நின்​றவுடன் குடிநீருக்கு அல்​லாடு​வதுமே தாம்​பரம் உள்​ளிட்ட தமிழகத்​தின் பல ஊர்களின் அவலநிலை​யாகி​விட்​டது. இப்​படிப்​பட்ட அலங்​கோல ஆட்​சியை நடத்​திக் கொண்​டிருக்​கும் அறி​வால​யத்​துக்​கு, அடுத்​த​முறை அரியணை என்​பது எட்​டாக்​கனி தான். இவ்​வாறு அதில்​ தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x