Published : 16 Oct 2025 05:30 AM
Last Updated : 16 Oct 2025 05:30 AM

அம்மாபேட்டையில் தொடர் மழையால் வயலில் சாய்ந்த 500 ஏக்கர் குறுவை பயிர்கள்

தஞ்சாவூர் மாவட்டம் அம்மாபேட்டை அருகேயுள்ள புத்தூரில் வயலில் தேங்கியுள்ள மழைநீரில் சாய்ந்துள்ள குறுவை நெற்பயிர்கள்.

கும்பகோணம்: தஞ்​சாவூர் மாவட்​டம் அம்​மாபேட்டை பகு​தி​களில் மழை காரண​மாக வயலில் தேங்​கிய மழைநீரில் 500 ஏக்​கர் குறு​வைப் பயிர்​கள் சாய்ந்​தன. பாப​நாசம் வட்​டம் அம்​மா​பேட்​டை, புத்​தூர், உடை​யார்​கோ​வில், அருந்​தவபுரம், உத்​தன்​குடி உள்​ளிட்ட 10-க்​கும் அதி​க​மான கிராமங்​களில் கடந்த ஜூலை இறு​தி​யில் 500 ஏக்​கருக்கு அதி​க​மான பரப்​பில் குறுவை நாற்​றுகள் நடவு செய்​யப்​பட்​டன. நெற்​ப​யிர்​கள் வளர்ந்து அறு​வடைக்​குத் தயா​ராக இருந்த நிலை​யில், கடந்த சில நாட்​களாக பெய்து வரும் மழை​யால், இப்​பகுதி வயல்​களில் மழைநீர் தேங்​கி​யுள்​ளது.

இந்​நிலை​யில், நேற்று முன்​தினம் இரவு தொடங்கி நேற்று அதி​காலை வரை பலத்த மழை பெய்​த​தால் நெற்​ப​யிர்​கள் அனைத்​தும் வயலில் சாய்ந்​து​ விட்​டன. இதனால் விவ​சா​யிகள் கவலை அடைந்​துள்​ளனர். இதுகுறித்து தமிழ்​நாடு விவ​சா​யிகள் சங்க மாவட்ட துணைச் செய​லா​ளர் ஆர்​.செந்​தில்​கு​மார் கூறிய​தாவது: அம்​மாபேட்டை மற்​றும் சுற்று வட்​டாரப் பகு​தி​களில் கனமழை​யால் 500-க்​கும் அதி​க​மான ஏக்​கரில் அறு​வடைக்கு தயா​ராக இருந்த குறுவை நெற்​ப​யிர்​கள் நீரில் சாய்ந்​து​விட்​டன.

இப்​பகு​தி​யில் 10-க்​கும் அதி​க​மான கிராமங்​களுக்கு வடி​காலாக உள்ள தஞ்​சாவூர்- நாகை சாலை​யோர வாய்க்​கால் மற்​றும் கோவில்​வெண்ணி வாய்க்​கால் ஆகியவை பல ஆண்​டு​களாக தூர் வாரப்​ப​டாததே காரணம். இந்த வாய்க்​கால்​களைத் தூர் வார வேண்​டும் என பலமுறை முறை​யிட்​டும், போராட்​டங்​கள் நடத்​தி​யும் நடவடிக்கை எடுக்​க​வில்​லை. மழை தொடரும் என வானிலை மையம் அறி​வித்​துள்ள நிலை​யில், தற்​போது வயலில் தேங்​கி​யுள்ள மழைநீர் வடி​யாமல் இருந்​தால் ஓரிரு நாட்​களில் நெற்​ப​யிர்​கள் முளைத்​து​விடும் அபா​யம் உள்​ளது.

இதனால், நெல்​மணி​கள் பதராகி, அறு​வடை செய்​தா​லும் விற்க முடி​யாத நிலை ஏற்​படும். ஏக்​கருக்கு ரூ.30 ஆயிரம் வரை செல​வழித்​துள்ள நிலை​யில் விவ​சா​யிகளுக்கு பெரும் இழப்பு ஏற்​படும். எனவே, மழை​யால் பாதிக்​கப்​பட்​டுள்ள குறுவை நெல் வயல்களை ஆய்வு செய்​து, மழைநீரை வடியச் செய்​ய​வும், மழைநீர் தேங்கி பாதிக்​கப்​பட்ட நெற்​ப​யிர்​களுக்கு இழப்​பீடு வழங்​க​வும் நடவடிக்கை எடுக்க வேண்​டும். இவ்​வாறு அவர் கூறி​னார்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x