Published : 13 Oct 2025 05:40 AM
Last Updated : 13 Oct 2025 05:40 AM

அதிமுக கூட்டத்தில் தவெகவினர் ​கலந்து கொள்வதை மற்ற ​கட்சிகளால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை: இபிஎஸ்

சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே, வாத்திப்பட்டி ஏரியை பார்வையிட்ட அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி, ஏரி நீரில் மலர்களை தூவி வணங்கினார்.

சேலம்: அதி​முக கூட்​டத்​தில், தவெக​வினர் ஆர்​வத்​துடன் கலந்து கொள்​கின்​றனர். இதை மற்ற கட்​சிகளால் பொறுத்​துக் கொள்ள முடிய​வில்​லை, என அதி​முக பொதுச்​செய​லா​ளர் பழனி​சாமி தெரி​வித்​தார். சேலம் மாவட்​டம் எடப்​பாடி​யில் நேற்று சுற்​றுப்​பயணம் மேற்​கொண்டு பெரிய சோரகை கிராமத்​தில் சென்​றாயப் பெரு​மாள் கோயில், சூரப்​பள்ளி அருகே காளி​யம்​மன் கோயில் ஆகிய​வற்​றில் பழனிசாமி வழிபட்​டார்.

பின்​னர், மேட்​டூர் உபரி நீர் திட்​டத்​தில் நீர் நிரம்​பி​யுள்ள வைர​வன் ஏரி, வாத்​திப்​பட்டி ஏரி ஆகிய​வற்றை அவர் பார்​வை​யிட்​டு, ஏரி நீரில் மலர்​களை தூவி வணங்​கி​னார். பின்​னர் செய்​தி​யாளர்​களிடம் பழனி​சாமி கூறிய​தாவது: அதி​முக ஆட்​சி​யில் மேட்​டூர் உபரிநீர் திட்​டம் ரூ.565 கோடி​யில் எடப்​பாடி, சங்​ககிரி, ஓமலூர், மேட்​டூர் ஆகிய 4 தொகு​தி​களில் 100 ஏரி​கள் பயனடை​யும் வகை​யில் கொண்டு வரப்​பட்​டது.

திட்​டம் தொடங்​கியதும், 6 ஏரி​களுக்கு நீர் கொண்டு செல்​லப்​பட்​டது. இதன் பிறகு திமுக ஆட்​சிக்கு வந்த நிலை​யில், 100 ஏரி திட்​டத்​தில் இது​வரை 59 ஏரி​களுக்கு மட்​டுமே மேட்​டூர் உபரிநீர் வந்​துள்​ளது. அதி​முக​வுக்கு பெயர் கிடைத்து விடக்​கூ​டாது என திமுக அரசு இத்​திட்​டத்தை திட்​ட​மிட்டு முடக்கி விட்​டது. அதி​முக மீண்​டும் ஆட்​சிக்கு வந்​தவுடன் இத்​திட்​டத்தை முழு​மை​யாக நிறைவேற்​றும்.

அதி​முக கூட்​டத்​தில், பங்​கேற்க கட்​சித் தலை​மை​யிடம் அனு​மதி பெற்று வரு​மாறு, தவெக​வினரிடம் எங்​களது மாவட்ட செய​லா​ளர்​கள் அறி​வுறுத்​தினர். ஆனால் அவர்​கள் ஆர்​வத்​துடன் கலந்து கொள்​கின்​றனர். இதை மாற்று கட்​சி​யின​ரால் பொறுத்​துக் கொள்ள முடிய​வில்​லை. திமுக கூட்​ட​ணி​யில் பல கட்​சிகள் உள்​ளன. அந்த கட்​சித் தலை​வர்​களுக்கு எங்​களைப் பற்றி பேச என்ன தகுதி இருக்​கிறது. எங்​களு​டன் கூட்​டணி சேரக்​கூடிய கட்​சிகளு​டன் நாங்​கள் பேசி வரு​கிறோம்.

அதைப்​பற்றி இவர்​கள் ஏன் விமர்​சனம் வைக்க வேண்​டும். தவெக கூட்​ட​ணிக்கு வந்​தால், பாஜகவை அதி​முக கழற்​றி​விடும் என்று டிடிவி தினகரன் கூறியது குறித்து கேட்​கிறீர்​கள். அவருடைய கருத்​தையெல்​லாம் பொருட்​படுத்​தத் தேவை​யில்​லை என்​றார். தொடர்ந்​து, அதி​முக- தவெக கூட்​டணி உறு​தி​யாகு​மா, விஜய்​யுடன் தொலைபேசி​யில் பேசினீர்​களா என செய்​தி​யாளர்​கள் கேட்​டனர். இதற்கு பதிலளித்த பழனி​சாமி, இந்த கூட்​டணி வரு​மா, அந்​தக் கூட்​டணி வருமா என்​பது தேர்​தல் நேரத்​தில்​தான் உறு​தி​யாகும். கரூர் சம்​பவம் நடந்​தவுடன் நேரில் சென்று பாதிக்​கப்​பட்​ட​வர்​களுக்கு ஆறு​தல் கூறினோம். இறந்​தவர்​களுக்கு அஞ்​சலி செலுத்​தினோம், அவ்​வளவு தான் என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x