Published : 10 Oct 2025 06:17 AM
Last Updated : 10 Oct 2025 06:17 AM

ஆடுதுறை அரசுப் பள்ளியில் தடுப்புச் சுவர் இல்லாமல் கழிப்பறை: 2 பேர் சஸ்பெண்ட் 

ஆடுதுறை அரசுப் பள்ளியில் திறக்கப்பட்ட சுகாதார வளாகம். (உள்படம்) சுகாதார வளாகத்தில் கட்டப்பட்டு வரும் தடுப்புச் சுவர்கள்.

கும்​பகோணம்: ஆடு​துறை அரசுப் பள்​ளி​யில் தடுப்​புச் சுவர் இல்​லாமல் கழிப்​பறை கட்​டிய விவ​காரத்​தில் பேரூ​ராட்சி செயல் அலுவலர் உட்பட 2 பேர் சஸ்​பெண்ட் செய்​யப்​பட்​டனர். தஞ்​சாவூர் மாவட்​டம் திரு​விடைமருதூர் அரு​கே​யுள்ள ஆடு​துறை அரசு மேல்​நிலைப் பள்​ளி​யில் ரூ.34 லட்​சத்​தில் சுகா​தார வளாகம் கட்​டப்​பட்​டுள்​ளது. இதை கடந்த 6-ம் தேதி பேரூ​ராட்​சித் தலை​வர் ம.க.ஸ்​டா​லின் திறந்து வைத்​தார்.

ஆனால், அந்​தக் கழிப்​பறை​யில் தடுப்​பு​கள் அமைக்​கப்​ப​டாத​தால், மாணவ, மாணவி​கள், ஆசிரியர்​கள் அதிர்ச்​சி​யடைந்​தனர். இது தொடர்​பான புகைப்​படங்​கள் சமூக வலை​தளங்​களில் வெளி​யாகி சர்ச்​சையை ஏற்​படுத்​தி​யது. இதையடுத்​து, சுகா​தார வளாகத்​தில் தடுப்​புச் சுவர் கட்ட வேண்​டுமென உயர​தி​காரி​கள் உத்​தர​விட்​டனர்.

இந்​நிலை​யில், திருச்சி மண்டல செயற் பொறி​யாளர் சுப்​பிரமணி​யன், தஞ்​சாவூர் பேரூ​ராட்​சிகள் உதவி இயக்​குநர் மாகீர் அபூபக்​கர் மற்​றும் அதி​காரி​கள் நேற்று முன்​தினம் இரவு முதல் அங்கு முகாமிட்​டு, தடுப்​புச் சுவர் கட்​டும் பணி​களை மேற்​கொண்​டனர். இதற்​கிடை​யில், இந்த சம்​பவம் தொடர்​பாக ஆடு​துறை பேரூராட்சி செயல் அலு​வலர் கமலக்​கண்​ணன், இளநிலைப் பொறி​யாளர் ரமேஷ் ஆகியோர் நேற்று முன்​தினம் சஸ்​பெண்ட் செய்​யப்​பட்​டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x