Published : 10 Oct 2025 12:57 AM
Last Updated : 10 Oct 2025 12:57 AM
சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: மாபெரும் மக்கள் பேரியக்கமாம் அதிமுக, அக்.17-ம் தேதி 54-ம் ஆண்டில் அடியெடுத்து வைப்பதை முன்னிட்டு, அக்.17, 18-ம் தேதிகளில், கட்சி அமைப்புரீதியாக செயல்பட்டு வரும் 82 மாவட்டங்களிலும்; புதுச்சேரி, ஆந்திரா உள்ளிட்ட பிற மாநிலங்களிலும் பொதுக்கூட்டங்கள் நடைபெற உள்ளன.
அதற்கான இடங்கள், அவற்றில் கலந்துகொண்டு சிறப்புரையாற்றுவோர் விபரங்கள் அடங்கிய பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி17-ம் தேதி சேலத்தில் நான் உரையாற்றுகிறேன். மாவட்டச் செயலாளர்கள், தங்கள் மாவட்டத்தில் நடைபெற உள்ள பொதுக்கூட்டங்களுக்கான நிகழ்ச்சிகளை அதிமுகவின் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகளுடனும் இணைந்து, சிறப்புப் பேச்சாளர்களுடன் தொடர்புகொண்டு, பொதுக்கூட்டங்களை ஏற்பாடு செய்து நடத்த வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT