Published : 08 Oct 2025 06:48 AM
Last Updated : 08 Oct 2025 06:48 AM

டெல்டா விவசாயிகளின் வயிற்றில் அடிக்கும் திமுக அரசு: இபிஎஸ், ஓபிஎஸ், அன்புமணி கண்டனம்

சென்னை: அறு​வடை செய்த நெல்லை கொள்​முதல் செய்​யாமல் டெல்டா மாவட்ட விவ​சா​யிகளின் வயிற்​றில் அடிக்​கும் வேலையில் திமுக அரசு ஈடு​பட்​டுள்​ள​தாக அதி​முக பொதுச்​செய​லா​ளர் பழனி​சாமி கண்​டனம் தெரி​வித்​துள்​ளார்.

இதுதொடர்​பாக அவர் நேற்று விடுத்த அறிக்​கை​யில் கூறி​யிருப்​ப​தாவது: காவிரி டெல்டா பகு​தி​களில் குறுவை சாகுபடிக்​குப்​பின் அறு​வடை செய்த நெல்லை விவ​சா​யிகளிட​மிருந்து அரசு, நேரடி நெல் கொள்​முதல் நிலை​யங்​கள் மூலம் முறை​யாக கொள்​முதல் செய்​யாத​தால், நெல் மூட்​டைகளு​டன் பல நாட்​கள் காத்​திருப்​ப​தாகத் தகவல்​கள் வரு​கின்​றன. டெல்டா மாவட்ட விவ​சா​யிகளின் வேதனை​களை புரிந்​து​கொள்​ளாமல், அவர்​களின் வயிற்​றில் அடிக்​கும் வேலை​யில் ஈடு​பட்​டுள்ள திமுக அரசை கண்​டிக்​கிறேன்.

ஏற்​கெனவே, மின்​சார வாரி​யம் மற்​றும் போக்​கு​வரத்​துக் கழகங்​கள் அதிக அளவு கடன் வாங்கி திவாலாக உள்ள நிலை​யில், தற்​போது நுகர்​பொருள் வாணிபக் கழகத்​தை​யும் பெரும் கடன் சுமை​யில் திமுக அரசு தள்​ளி​ விட்​டுள்​ளது. திமுக அரசு முற்​றி​லும் செயலிழந்​து​விட்​டது. போர்க்​கால அடிப்​படை​யில் நேரடி நெல் கொள்​முதல் நிலை​யங்​களில், உடனுக்​குடன் நெல்லை கொள்​முதல் செய்ய வேண்​டும். இவ்​வாறு அவர் தெரி​வித்​துள்​ளார்.

முன்னாள் முதல்வர் ஓ.பன்​னீர்​செல்​வம்: விவ​சா​யிகளுக்கு அறு​வடை இயந்​திரங்​கள் நியாய​மான விலை​யில் வாடகைக்கு கிடைக்​க​வும், நெல் கொள்​முதல் விரைந்து நடை​பெற​வும், நெல் மூட்​டைகளை கிடங்​கு​களில் பாது​காப்​பாக வைக்க வழி​வகை செய்ய வேண்​டும்.
கிடங்​கு​களி​லேயே அவற்றை எடை போட்டு கொள்​முதல் செய்​ய​வும், மூட்​டைக்கு கமிஷன் வாங்​கப்​படு​வதை தடை செய்​ய​வும் வேண்​டும். இதன்​மூலம் விவ​சா​யிகளின் வாழ்​வா​தா​ரத்தை காப்​பாற்ற வேண்​டும்.

பாமக தலைவர் அன்​புமணி: டெல்டா மாவட்​டங்​களில் 4 லட்​சத்​துக்​கும் கூடு​தலான நெல் மூட்​டைகள் 10 நாட்​களுக்​கும் மேலாக கொள்​முதல் செய்​யப்​ப​டா​மல் தேங்கி கிடக்​கின்​றன. கொள்​முதல் செய்​யப்​பட்ட 15 லட்​சத்​துக்​கும் கூடு​தலான நெல் மூட்​டைகளும் கிடங்​கு​களுக்கு கொண்டு செல்​லப்​ப​டாத​தால் கொள்​முதல் பணி​கள் பாதிக்​கப் பட்​டுள்​ளன. ஆனால், நிலை​மையை சரிசெய்ய அரசு எந்த நடவடிக்​கை​யும் எடுக்​காதது கண்​டிக்​கத்​தக்​கது. எனவே தேங்​கிக் கிடக்​கும் நெல் மூட்​டைகளை உடனடி​யாக கொள்​முதல் செய்ய வேண்​டும். கொள்​முதல் நிலை​யங்​கள் மற்​றும் சேமிப்பு கிடங்​கு​களின் எண்​ணிக்​கையை அதி​கரிக்க வேண்​டும்.

தமிழ்நாடு விவசாயிகள் சங்கத் தலைவர் சாமிநட​ராஜன்: நெல் கொள்​முதல் நிலை​யங்​களில் விற்​பனை செய்​வதற்​காக விவ​சா​யிகள் பல நாட்​கள் காத்​திருக்க வேண்​டியுள்​ளது. உடனடி​யாக கொள்​முதல் செய்​யப்​பட்ட நெல்லை கிடங்​கு​களி​லும், தேவையேற்​பட்​டால் திறந்​த வெளி கிடங்​கு​களி​லும் சேமிப்​ப​தற்​கான பணி​களை போர்​கால அடிப்​படை​யில் மேற்​கொள்ள வேண்​டும். தேவை​யான இடங்​களில் நடமாடும் கொள்​முதல் நிலை​யம் அமைக்க வேண்​டும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x