Published : 08 Oct 2025 06:41 AM
Last Updated : 08 Oct 2025 06:41 AM

டெங்கு பாதிப்பு கட்டுப்பாட்டில் உள்ளது: அமைச்சர் மா.சுப்பிரமணியன் உறுதி

சென்னை: தமிழகத்​தில் டெங்கு பாதிப்பு கட்​டுப்​பாட்​டில் உள்​ளது என்று சுகா​தா​ரத் துறை அமைச்​சர் மா.சுப்​பிரமணி​யன் கூறினார். வடகிழக்​குப் பரு​வ​மழை முன்​னேற்​பாட்டு பணி​கள், தொற்​று​நோய் தடுப்பு நடவடிக்​கைகள் குறித்த கலந்​தாலோ​சனைக் கூட்​டம் சென்னை அண்​ணா​சாலை​யில் உள்ள அரசு பன்​னோக்கு உயர்​சிறப்பு மருத்​து​வ​மனை கூட்ட அரங்​கில் நேற்று நடந்​தது.

நகராட்சி நிர்​வாகத் துறை அமைச்​சர் கே.என்​.நேரு, சுகா​தா​ரத் துறை அமைச்​சர் மா.சுப்​பிரமணி​யன் ஆகியோர் தலை​மை​யில் நடந்த இக்​கூட்​டத்​தில், சுகா​தா​ரம், நகராட்சி நிர்​வாகம், ஊரக வளர்ச்சி உள்​ளிட்ட பல்​வேறு துறை​களின் செய​லா​ளர்​கள், இயக்​குநர்​கள் பங்​கேற்​றனர். இதில், புகை மருந்து தெளிப்​புக்​கான வழி​காட்டு நெறி​முறை​கள் அடங்​கிய பதாகைகளை​யும், தமிழ்​நாடு நுண்​ணு​யிர் எதிர்ப்பு மற்​றும் மேற்​பார்வை வழி​காட்டு நெறி​முறை​கள் அடங்​கிய கையேட்​டை​யும் அமைச்​சர்​கள் வெளி​யிட்​டனர்.

அமைச்​சர் கே.என்​.நேரு செய்​தி​யாளர்​களிடம் கூறும்​போது, “வடகிழக்​குப் பரு​வ​மழை​யால் மக்​களுக்கு எந்த பாதிப்​பும் ஏற்​ப​டா​மல் இருக்​க​வும், கொசுக்​கள் பாதிப்பு மற்​றும் மழைக்​கால நோய் பாதிப்​பு​களில் இருந்து மக்​களைப் பாது​காக்​க​வும் இந்​தக் கூட்​டம் நடை​பெற்​றது. இதில் சுகா​தா​ரத் துறை சார்​பாக எடுக்​கப்பட வேண்​டிய நடவடிக்​கைகள், நகராட்சி நிர்​வாகம் மற்​றும் குடிநீர் வழங்​கல் துறை மூலம் வழங்​கப்​படும் நடவடிக்​கைகள் குறித்து ஆலோ​சித்​திருக்​கிறோம்.

இந்​தக் கூட்​டத்​தின் மூலம் மக்​களுக்​குப் பயன்​தரும் வகை​யில் பல்​வேறு நடவடிக்​கைகள் மேற்​கொள்​ளப்​படும்” என்​றார் அமைச்​சர் மா.சுப்​பிரமணி​யன் செய்​தி​யாளர்​களிடம் கூறும்​போது, “மழைக்​காலங்​களில் வீடு​களைச் சுற்றி தேங்​கி​யிருக்​கும் மழைநீ​ரால் கொசுக்​கள் உற்​பத்​தி​யாகின்​றன. ஏடிஸ் என்ற கொசுக்​களை ஒழிக்க வீடு வீடாகச் சென்​று, மழைநீர் தேங்கி இருக்​கும் பகு​தி​களைக் கண்​டறிந்து தூய்​மைப்​படுத்தி வரு​கிறோம்.

கொசு மருந்து அடித்​தல், மருந்து தெளித்​தல் போன்ற பல்​வேறு பணி​கள் தொடர்ந்து மேற்​கொள்​ளப்​படு​கின்​றன. நடப்​பாண்டு 15,796 டெங்கு பாதிப்​பு​கள் ஏற்​பட்​டு, 8 பேர் இறந்​துள்​ளனர். உயி​ரிழந்​தவர்​கள் இணை நோய் பாதிப்​புக்கு உள்​ளானவர்​கள். இது தொடர்​பாக மக்​களிடம் விழிப்​புணர்வை ஏற்​படுத்த நடவடிக்​கைகள் எடுக்​கப்​பட்​டுள்​ளன. தமிழகத்​தில் டெங்கு பாதிப்பு கட்​டுப்​பாட்​டில்​தான் இருக்​கிறது” என்​றார்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x