Published : 08 Oct 2025 06:34 AM
Last Updated : 08 Oct 2025 06:34 AM

அதிமுகவுடன் பாஜக ஆலோசனை: கொங்கு மண்டலத்தில் அதிக தொகுதிகளை ஒதுக்க கோரியதாக தகவல்

அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமியை பாஜக மேலிட தமிழக தேர்தல் பொறுப்பாளர் பைஜெயந்த் பாண்டா நேற்று சந்தித்து ஆலோசனை நடத்தினார். பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் உடனிருந்தார்.

அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமியை பாஜக தேர்தல் பொறுப்பாளர் சந்தித்து ஆலோசனை மேற்கொண்டனர். இந்த சந்திப்பின் போது பாஜகவுக்கு கொங்கு மண்டலத்தில் அதிக தொகுதிகளை ஒதுக்க கோரியதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமி​ழ​கத்​தில் அடுத்த ஆண்டு நடை​பெறவுள்ள சட்​டப்​பேரவை தேர்​தலுக்கு அரசி​யல் கட்​சி​யினர் தீவிர​மாக தயா​ராகி வரு​கின்​ற​னர். பிரச்​சா​ரங்​கள், மக்​கள் சந்​திப்​பு, பூத் கமிட்டி ஆலோ​சனை என பல கட்​சிகளும் தேர்​தலை நோக்கி பணி​யாற்றி வரு​கின்​ற​னர். கடந்த ஏப்​ரல் மாதம் அதி​முக - பாஜக கூட்​டணி உறு​தி​யானது. தமி​ழ​கத்​தில் தேசிய ஜனநாயக கூட்​ட​ணிக்கு அதி​முக பொதுச்​செய​லா​ளர் பழனி​சாமி தலைமை வகிப்​பார் என அமித்ஷா அறி​வித்​தார். ஏற்​கெனவே தேசிய ஜனநாயக கூட்​ட​ணி​யில் இருந்த ஓ.பன்​னீர்​செல்​வம், டிடி​வி.​தினகரன் ஆகி​யோர் கூட்​ட​ணி​யில் இருந்து வெளி​யேறினர். அதி​முக கூட்​ட​ணி​யில் இருந்த தேமு​தி​க​வும் மாநிலங்​களவை சீட் வழங்​காத​தால் கூட்​ட​ணி​யில் இருந்து வில​கியது. மேலும் பாமக​வில் உட்​கட்சி பிரச்​சினை காரண​மாக நிலை​யற்ற தன்மை உள்​ளது.

தமி​ழ​கத்​தில் தேசிய ஜனநாயகக் கூட்​ட​ணியை பலப்​படுத்​தும் பணி​களை பாஜக தொடங்​கி​யுள்​ளது. கடந்த சில நாட்​களுக்கு முன் தமிழக தேர்​தல் மேலிட பொறுப்​பாள​ராக பைஜெயந்த் பாண்​டா, இணை பொறுப்​பாளர் முரளிதர் மொஹோல் ஆகி​யோரை பாஜக நியமனம் செய்​தது. பைஜெயந்த் பாண்டா இதற்கு முன் 2021-ம் ஆண்டு நடந்த அசாம் சட்​டப்​பேரவை தேர்​தல், கடந்த பிப்​ர​வரி​யில் நடை​பெற்ற டெல்லி சட்​டப்​பேரவை தேர்​தல்​களில் பாஜக சார்​பில் மேலிட பொறுப்​பாள​ராக பணி​யாற்​றிவர். இந்த இரண்டு தேர்​தல்​களி​லும் பாஜக அமோக வெற்றி பெற்​றது. தமி​ழ​கத்​தி​லும் வெற்றி வாய்ப்பை அதி​கரிக்க இவரை தேர்​தல் பொறுப்​பாள​ராக பாஜக நியமித்​துள்​ள​தாக அரசி​யல் வட்​டாரங்​கள் தெரிவிக்​கின்​றன.

இந்​நிலை​யில், நேற்று முன்​தினம் சென்னை வந்த தேர்​தல் பொறுப்​பாளர் பைஜெயந்த் பாண்​டா, மாநில தலை​வர் நயி​னார் நாகேந்​திரன் மற்​றும் நிர்​வாகி​களு​டன் ஆலோ​சனை மேற்​கொண்​டர். நேற்று சென்னை பசுமை வழிச்​சாலை​யில் அதி​முக பொதுச்​செய​லா​ளர் பழனி​சாமியை பைஜெயந்த் பாண்டா மற்​றும் பாஜக மாநில தலை​வர் நயி​னார் நாகேந்​திரன் ஆகி​யோர் சந்​தித்து ஆலோ​சனை மேற்​கொண்​டனர். நேற்று காலை 10.45 மணி முதல் 11.30 மணி வரை 45 நிமிடங்​கள் ஆலோ​சனை நடை​பெற்​றது.

இந்த சந்​திப்​பின் போது தேசிய ஜனநாயக கூட்​ட​ணி​யில் இன்​னும் பல கட்​சிகளை இணைப்​பது குறித்து ஆலோ​சிக்​கப்​பட்​ட​தாக கூறப்​படு​கிறது. மேலும் 2021 தேர்​தலில் 20 இடங்​களில் பாஜக போட்​டி​யிட்ட நிலை​யில் வரும் தேர்​தலில் அதிக சீட்​டு​களை கேட்​டுள்​ள​தாக​வும், குறிப்​பாக கடந்த மக்​களவை தேர்​தலின் போது பாஜக அதிக வாக்​கு​கள் பெற்ற தொகு​தி​கள் மற்​றும் கொங்கு மண்​டலத்​தில் அதிக தொகு​தி​கள் ஒதுக்​கு​மாறு கோரிக்கை விடுத்​த​தாக​வும் கூறப்​படுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x