Published : 08 Oct 2025 05:34 AM
Last Updated : 08 Oct 2025 05:34 AM

கோவை அவிநாசி சாலை பாலத்துக்கு ஜி.டி.நாயுடு பெயர்: முதல்வர் நாளை திறந்து வைக்கிறார்

கோவை அவிநாசி சாலையில் 10.10 கி.மீ. தூரத்துக்கு கட்டப்பட்டுள்ள புதிய உயர்மட்ட பாலம்.

கோவை: கோவை அவிநாசி சாலை​யில் கட்​டப்​பட்​டுள்ள, தென்​னிந்​தி​யா​விலேயே நீள​மான உயர்​மட்ட பாலத்​துக்கு ஜி.டி.​நா​யுடு பெயரைச் சூட்​டிய முதல்​வர் ஸ்டா​லின், மக்​கள் பயன்​பாட்​டுக்கு நாளை (அக். 9) திறந்து வைக்​கிறார். கோவை அவி​நாசி சாலை​யில் போக்​கு​வரத்து நெரிசலை தவிர்க்க ரூ.1,791.23 கோடி​யில் உப்​பிலி​பாளை​யம் முதல் கோல்​டு​வின்ஸ் வரை 10.10 கிலோமீட்​டர் தொலை​வுக்கு உயர்​மட்​டப் பாலம் அமைக்​கப்​பட்​டுள்​ளது.

பாலத்​தின் சிறப்​பு​கள் குறித்து மாநில நெடுஞ்​சாலைத் துறை அதி​காரி​கள் கூறிய​தாவது: இந்​தப் பாலத்​தின் ஓடுதள அகலம் 17.25 மீட்​ட​ராகும். இதில் 304 தூண்​கள் அமைக்​கப்​பட்​டுள்​ளன. நான்கு வழித்தட உயர்​மட்​டப் பாலம், 6 வழித்​தடத்​துடன் விரிவுபடுத்​தப்​பட்ட சாலை என மொத்​தம் 10 வழித்​தடங்​களு​டன், தென்​னிந்​தி​யா​விலேயே மிக நீள​மான உயர்​மட்ட பால​மாக இது அமைக்​கப்​பட்​டுள்​ளது.

இந்​தப் பாலத்​தில் அண்ணா சிலை, பீளமேடு, ஹோப் காலேஜ், விமான​நிலை​யம் ஆகிய இடங்​களில் ஏறு, இறங்கு தளங்​கள் அமைக்​கப்​படு​கின்​றன. கோல்​டு​வின்ஸ் அருகே 183 மீட்​டர் நீளத்​தி​லும், உப்​பிலி​பாளை​யம் அருகே 267 மீட்​டர் நீளத்​தி​லும் அணுகு சாலை அமைக்​கப்​பட்​டுள்​ளது. ஹோப் கல்​லூரி சந்​திப்​பில் ரயில்வே மேம்​பாலம் உள்​ளது. அதன் மீது 52 மீட்​டர் நீளத்​துக்​கு, 725 டன் எடை கொண்ட 8 இரும்பு கர்​டர்​கள் பொருத்​தப்​பட்​டுள்​ளன. 20-க்​கும் மேற்​பட்ட இடங்​களில் மழைநீர் சேகரிப்பு கட்​டமைப்பு ஏற்​படுத்​தப்​பட்​டுள்​ளது.

வாக​னங்​கள் செல்​லும்​போது அதிர்வு மற்​றும் சப்​தம் கேட்​பதை தவிர்க்க, புதிய தொழில்​நுட்​பங்​களு​டன் ‘சைனஸ் பிளேட்’ பொருத்​தப்​பட்​டுள்​ளது. இந்த புதிய பாலத்​தின் மூலம் கோவை நகரில் இருந்து விமான நிலை​யம் செல்​லும் நேரம் 45 நிமிடங்​களில் இருந்து 10 நிமிடங்​களாக குறை​யும். மொத்​தம் 10 சிக்​னல்​களைத் தவிர்க்​கலாம். இவ்​வாறு அதி​காரி​கள்​ தெரி​வித்​தனர்​.

இதற்​கிடை​யில், முதல்​வர் ஸ்டா​லின் தனது வெளி​யிட்ட சமூக வலை​தளப்​ப​தி​வில், “கடந்த 2020-ல் அறிவிக்​கப்​பட்டு 2021 மே மாதம் வரை 5 சத வீதம் பணி​கள் மட்​டுமே நடை​பெற்​றிருந்த அவி​நாசி சாலை மேம்​பாலம், திரா​விட மாடல் அரசு பொறுப்​பேற்​றபின்​னர் ரூ.1,791 கோடி செல​வில், 10.10 கி.மீ. நீள​முள்ள பாலத்​தின் மீத மிருந்த 95 சதவீதம் பணி​கள் விரை​வாக முடிக்​கப்​பட்​டன.

கோவை மக்​களின் நீண்​ட​நாள் கோரிக்​கை​யான இந்த அவி​நாசி சாலை உயர்​மட்ட பாலத்தை நாளை மக்​கள் பயன்​பாட்​டுக்​குத் திறந்து வைக்க இருக்​கிறேன். கோவை என்​றாலே புதுமை என்​ப​தற்​கேற்ப, புதிய அறி​வியல் கண்​டு​பிடிப்​பு​களால் பெருமை சேர்த்த இந்​தி​யா​வின் எடிசன், பெரி​யாரின் உற்ற கொள்​கைத் தோழர் ஜி.டி.​நா​யுடு​வின் பெயரை இந்த மேம்​பாலத்​துக்கு சூட்​டு​கிறேன்” என்று தெரி​வித்​துள்​ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x